வாசித்தல் பழக்கம்
நேசித்தலின் பொருட்டு
வந்ததா என்று தெரியவில்லை
ஆனாலும் நேசிக்கிறேன்
இந்த வாசித்தலை.........
# இதுவும் காதலே...
குறுகுறுக்கும் பார்வைதனில்
ஒளிந்திருக்கும் குறும்புதனை
ரசிக்கத்தெரிந்தவனே
காதலிக்கிறான்..
# இதுவும் காதலே...
அடைப்புக்குள் வைக்கப்பட்ட
அத்தனையையும் கடந்து
என்னை பித்தனாக்கும்
இந்த உணர்வுக்கு
என்ன பெயர்...
# இதுவும் காதலே...
ஒரு தோல்வி
உன்னை தூக்கி நிறுத்த
அனுமதித்தால்
இதுவும் காதலே.......
எது எதுவோ
நம்மைத்தாக்க
எதன் பொருட்டோ
நாம் நம்மை தொலைக்க
முகவரியிடம் கள(ல)வு போனால்
# இதுவும் காதலே
கயிறறுந்த பட்டமாகிறது
மனது
நீ பட்டாம்பூச்சியை துரத்திக்கொண்டு
ஓடுகையில் :)
உன்னிடமிருந்தே பெறப்படுகிறது
இந்த காதலும்
அதற்கீடான
எந்தன் கவிதையும்...
அடுக்கடுக்காய் சொல்லப்படும்
அத்தனை பொய்களிலும்
அழகாய் சிரித்து கொள்(ல்)கிறது
இந்த பொல்லாத கவிதை.........
நீயும் நானுமாய்
நடந்த இடங்களை
கடந்து செல்கிறேன்
நீயற்ற உன் நினைவோடு..........
நான் எதைக்கொடுத்தாலும்
எப்படி
உடனே திருப்பித்தருகிறாய்
கவிதைகளாய் :)
கைகளில் மழை நீரை ஏந்தி
விளையாடும் பிள்ளை போலவே
மாறிப்போகிறேன்
உன்னை என் கவிதையில் ஏற்றி....
எந்த மழையும்
நம்மை நனைப்பதாய் இல்லை
நம்மை சேர்த்துவைத்த
அந்த மழையைத்தவிர :)
உன் முத்தங்களை வெல்ல நினைத்து
மொத்தமாய் தோற்றுப்போன
இந்த கவிதைக்கு
என்ன பெயர் வைப்பது?....
என் மெளனங்களை
உடைத்தெரிய
எப்படி முடிகிறது,
உனக்கும்
இந்த மழைக்கும் :)
நம் ஒவ்வொரு சந்திப்பும்
புத்தகத்தின் கடைசி பக்கங்களின்
புதைந்திருக்கும் முடிவைப்போன்றது
சுபமாய் இருந்தாலும்
சுலபமாய் இருந்துவிடுவதில்லை :)
எதிர்பாரா இந்த மழை
மண்வாசனைக்கு பதில்
உன் வாசனை தருவதேன்?...
எதை எழுதினாலும்
அதை பாதியிலே
நிறுத்திவிடுகிறது
பாழாய் போன
உந்தன் நினைவு.... :)
என் எழுதுபொருளில்
நீயிருக்கிறாய்
என்பதற்காகவே எழுதப்படுகின்றன
இவ்வரிகள் ஒவ்வொன்றும் :)
ஒவ்வொரு புரையேறுதலுக்கு
பின்னும்
புரையோடிப்போன
உந்தன் நினைவுகள் மீட்டெடுக்கின்றன
என்னை...........
வாசித்துமுடித்து விடு
இல்லை
வாரிக்குடித்து விடு
அதுவரை
தாகம் தீராது
இந்த கவிதைக்கு
காதலுக்கென்று
தனிமொழியேதுமில்லாமல்
போனாலும் போய்விடும்
கொஞ்சம் வாய் திறந்து பேசிவிடு....
விதைத்தவனாய்
நீ இருக்க
தன்னை தானாய்
வளர்த்துக்கொள்கிறது
இந்த காதல்.....
ஆணியம் பேசிய உன்னையும்
பெண்ணியம் பேசிய என்னையும்
பார்த்து சிரித்துகொள்கிறது
இந்த காதலியம்...

தீர்ந்துவிடுமோ
என்ற பயத்தில்
நீ பத்திரப்படுத்தும்
புன்னகை தான்
என்னை
பாதிப் பைத்தியமாக்குகிறது
என்பதை அறிவாயா
நீ?....
வரங்கள் சில நேரம்
சாபங்களாய் போவதுண்டு
இதழ் முத்தம் கொஞ்சம்
கன்னத்திற்கு ஈயப்படும் போது......
= ரேவா
உனக்காக எங்கு காத்திருந்தாலும்
அவ்விடத்தையெல்லாம்
விட்டுவிட்டு
நீ இருக்கும் இடத்தை நோக்கியே
இழுத்துவருகிறது
மனது...
உன் தோள்களில்
சாய்ந்துகொள்வதற்காவே
பேருந்து பயணத்தையே
தேர்வு செய்கின்றேன்யென்பதை
நீ அறிவாயா?........
உன் அழகு சுமந்துவரும்
இந்த கவிதையை
இறக்க இடம் காணாமல்
தேடுகிறேன்
இப்புவி முழுவதும்....
கல்லில் சிலைவடிக்கும்
சிற்பியாய்
என்னில் காதல் வரவைத்த
கலைஞன்
நீ.........
சிரிப்பதும்
பின் அணைப்பதுமாய்
நீள்கிறது
நம் சண்டைக்கு பின்னான
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்.........
எத்தனையோ முறை
உன்னை மறக்க
முயற்சித்தும்
பூஜ்ஜியங்களிலே
வந்து முடிக்கின்றது
மனம்..........
மற்ற ஆணிடமிருந்து
உன்னை
தனித்து காட்டும் சொல்
காதல்.......
உன்னை நினைத்தவுடனே
கண் முன்னே கட்டிப்போட
எப்படி தெரிகிறது
என் கவிதைக்கு..
உன் நினைவுத்தலையணையில்
பத்திரமாய் உறக்குகிறது
என் காதல்......
ஊரெங்கும் அடைமழை
உள்ளுக்குள் நிறைந்து
வழிகிறாய்
நீ
முந்தைய பதிவு :
இவன்
என் வரையறுக்கப்பட்ட வார்த்தை
வாழத்தூண்டும் அனுபவம்
கூடவே இருக்கும் அறை நிலா..
எந்த புள்ளியில்
தொடங்கினாலும்
அது உன்னையே
வந்து சேர்கின்றது..
எழுதா பக்கங்களைப்போல
ஒரு அழகான் கவிதை
இருந்துவிடுமா
உன்னை பற்றி சொல்ல...
தனிமையில் துணைக்குவரும்
நிலவை போல
நிழலைப்போல
எனக்கு
நீ...
உன்னால் தூண்டப்படும்
என் கவிதைகளில்
காதல் இருக்கலாம்
இல்லாமலும் இருக்கலாம்
ஆனால்
அதில் நீ இருக்கிறாய்........
உன்னை பார்த்த
முதல் தேதியை குறித்தது,
உனக்கு பிடித்தவற்றை
பிரியத்தோடு பார்த்தது,
உன் கைகுட்டையில்
வேர்வை வாசம்
... பிடித்தது,
உன் காலனியில்
என் காலடிதடம் பதித்தது,
நீ வீசி எறிந்த
மிட்டாய் பேப்பரிலிருந்து,
பேருந்து சீட்டு,
சிகெரட் துண்டுவரை
அத்தனையையும்
பத்திரப்படுத்தும்
இந்த செய்கைக்கு
பெயர் காதலில்லை,
அதே நேரத்தில்
இந்த செய்கையில்
காதல் இல்லாமலும் இல்லை....
சுற்றித்திரிந்த பெருவெளிகளின்
சூடு இன்னும் குறைந்தபாடில்லை..
கண் பார்த்த தருணத்தில்
உணர்வுகளின் உந்தலில்
இது விளைந்ததா?
இதுவரை விளங்கவில்லை....
கதையளந்தோம்
கற்பிற்க்கான வரையறை வைத்தோம்
தொட்டு பேசிவிட்டு
தொடாமல் விட்டுச்சென்றோம்
சண்டையிட்டோம்,
பிடிவாதாம் கொண்டோம்
ஒருவரை வெல்ல நினைத்து
இருவரும் தோற்றே போனோம்
ஆள நோக்கி,
அறியாமல் அளவெடுத்து
முதல் முத்தம் பதித்த
அந்த இடம்
அழியாமலிருக்கும் விந்தைகண்டு
ஆச்சர்யப்பட்டோம்...
கதறியழுகின்றேன்
இந்த தோல்வி
இந்த பிரிவு
எங்கனம் சாத்தியமென்று...
விடை சொல்லி விடு..
அன்றில்
காதல் பழகிய
இடத்தில்
என்னை கொன்றுவிடு..
இல்லை வழக்கமாய்
உம் வர்க்கம் பயன்படுத்தும்
வார்த்தையால்
எம்மை வதைத்துவிடு..
அதையும் விட
கொடுமையாய்
நீயே என் உயிரை
பிரித்துவிடு..
நீயற்ற தனிமைக்கு
துணையாய் இருக்கும்
இந்த கவிதைக்கு புரியும் முன்
இப்பிரிவுக்கு
நீயே பெயர் வைத்துவிடு..
இல்லையேல்
இதுவும் ஒரு தோல்விக் கவிதையென
பொருள்கொண்டுவிடும்
நீயில்லாத இவ்வுலகம்
ஆலங்கட்டி மழைபோல
அழுத்தமாய் வந்துவிழுந்த
உன் பார்வையில்
திக்குமுக்காடிப்போனது
மனது....
எப்படி சாத்தியமென்றே
தெரியாமலே
பல சந்திப்புகள்...
காலம் மறந்த பேச்சுக்கள்,
காரணமறியா காத்திருப்புகள்,
மின் கடத்தும் பார்வைகள்,
உதட்டோர புன்னகையென
அத்தனையிலும் பொருளில்லை
பொறுப்பான காதலை
தவர..
நீ ஸ்பரிசம் தந்தாய்
நான் பரிசளித்தேன்...
எதற்காக என்று
இன்னும் விளங்கவில்லை...
எனக்கு பிடித்தவைகள்
உனக்கு பிடிகாதாவைகள்
எது எதுவென இதுவரை
நான் கேட்டதில்லை...
நீ சொன்னதுமில்லை...
நீ பரிசாய் தந்த
ஒவ்வொன்றிலும்
நீயிருந்தாய்..
நம்மை வெல்லத்துணிந்த
காதல் நிமிடங்களில்
நாமாயிருந்தோம்...
தடையில்லா காட்டாற்றைப் போல
வலிமறந்து, வழிமறைத்த
உன் காதல் பெருவெள்ளத்தில்
திளைத்த வேளைகளில்
மொத்தமாய்
தொலைந்துபோயிருந்தேன்
உனக்குள்...
இது எங்கே முடியுமென்று
தெரியாமல் சுழன்றோம்,
முடியாமல் இருக்க
முடிந்தவரை தொடந்தோம்..
அன்றும் அப்படி தான்
காலை சூரியன் மாலைக்குள்
ஒளிந்துகொண்டிருந்த நேரத்தில்,
என் கண்ணீரின் ஈரத்தை
உன் ஈரமுத்தம்
துடைத்தது வரை நினைவிருக்கு..
இதோ முடியப்போகும்
இந்த கவிதையைப் போலத்தான்
காரணமின்றி முடிந்து
போகிறது
சில காதலும்....
ஏதேதோ
பேச நினைத்த
வேளைகள்,
புரிந்தும் புரியாமலுமாய்
பல உரையாடல்கள்..
உனக்கு மட்டுமே
புரிந்த
என் மெளனம்,
இன்னும் இன்னும்
என தாகம் கொண்ட
பேசித் தீர்க்கா
வார்த்தைகள்,
எதைச் சொல்ல,
எதை மெல்லவென
புரியாத பதட்டம்..
என அத்தனையும்
அரங்கேறும்
காதலர் பேச்சில்...
என் கவிதைகள்
அனைத்தும்
உன் குறும்புத்தனத்தில்
விளைந்தவை..
ஒரு போதும் நிறுத்திவிடாதே,
உன் குறும்புத்தனத்தை
கோவித்துக்கொள்ளும்
என் கவிதைகள்...
*
என்னை பார்க்காமல்
ஒதுக்கும்
உன் கண்களில் தான்
நமக்கான காதல்
ஒளிந்திருக்கின்றது..
*
எழுதாக் கவியாகிறேன்
உன் ஒவ்வொரு
பார்வையிலும்...
*
வேண்டாம் வேண்டாம்
என்றாலும்
வேண்டும் வேண்டுமென்ற
என் வேட்கையைத் தூண்டுகிறது
உன் பார்வை ..
*
என் கவிதைகள்
அனைத்தும் கற்பனையே..
ஆனால்
என் காதல்
கற்பனையில் கிடைத்த
வரம்...
*
என் எல்லாக்கவிதையை
விடவும்
உன் முத்தம் பெற்ற
என் முதல் கவிதையே
என் மொத்த கவிதைக்கான
முதலீடு...
*
கந்துவட்டிக்காரன்
மாதிரி
பிச்சு பிச்சு
காதல் கொடுக்கிறாய்..
முத்தம் என்று வந்துவிட்டால்
மொத்தமாய் கேட்கிறாய்
கொலைகாரா?...!!!!
*
உன் ஒரப்பார்வைக்காய்
தன்னை மேலும் மேலும்
அழகாக்கிகொண்டே
போகிறது
என் கவிதைகள்..
*
உன் காதலை
என் கவிதையில்
மிஞ்சவேண்டுமென்பதே
என் வாழ்நாள் தவம்..
*
சொர்க்கத்தையும்,
நரகத்தையும்
ஒரே மூச்சில்
எப்படி காட்டிவிட்டு போகிறாய்..
தூரப்புன்னகை,
கிட்ட வந்ததும்
அனல் பார்வையாய்...
*
ஆயிரம் முறை
என்னை
அழகு படுத்திய சந்தோஷம்
உன் அரை நிமிட
தலைகோதலில் கிடைத்துவிடுகிறது
எனக்கு...
*
கடலலையில் காலடித்தடம்
தேடும் குழந்தையாய்
மாறிப்போகிறேன்,
உன்னுள்
என்னை
தொலைத்துவிட்டு...
*
நானே மொழியாகிறேன்
நீ என்னை
வாசிக்கும் போதெல்லாம்..
நானே கவியாகிறேன்
நீ என்னை
நேசிக்கும் நேரங்களில்லெல்லாம்..
*
உனக்கு பிடித்ததை
தெரிந்து வைத்திருக்கிறேனோ
இல்லையோ
உன் கோவத்தை
ரசிப்பதற்க்காகவே
உனக்கு பிடிக்காதவைகளை
நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றன
என் செய்கைகள்..
*
இலக்கணங்கள் மீறும் போது
புதுக்கவிதையாகிறது,
நட்பு மாறும் போது
காதலாகிறது...
*
இதயம் தொடங்கி
இதழில் முடியும்
வ்ண்ண கோலமோ
காதல்...
♥
புரிந்து கொண்டே
அவிழ்க்க முடியா
அசுர முடிச்சோ
காதல்...
♥
உன்னுள் என்னை
தொலைய வைத்த
கொள்ளைக்காரனோ காதல்
♥
ரகசியங்களின்
பிரபஞ்ச ரகசியமோ
காதல்
♥
தெரிந்த கேள்விக்கு
விடைதெரியா பதிலோ
காதல்..
♥
விடுபட்டு போனாலும்
தேடித்திரிக்கின்ற விலாசமோ
காதல்..
♥
புன்னகை செய்தாலும்
உள்ளுக்கும் ரணம் கக்கும்
விஷமா
காதல்
♥
குட்டிக் குழந்தையிடம்
கொட்டிக்கிடக்கின்ற
பொம்மையா
காதல்...
♥
திட்டித் தீர்த்தாலும்
திருப்பிப் பார்க்கும்
அன்பா காதல்...
♥
ஒருவர் கண்ணீரில்
இன்னொருவரும் கரைகின்ற
கலையா காதல்
♥
வானவில் நேரத்தில்
வந்து விழும்
வான் மழையோ
காதல்...
♥
அட இதுதான்
என்றில்லாமல்,
உயிருக்குள் உயிர் சுமக்கும்
கலையே காதல்..
♥
பெரிதான காதலிடம்
சிறிதான காமம் வந்து,
சிறிதினும் பெரிது
கேட்கும்
அன்பு நிலையே
காதல்...
♥
நம்மை நமக்கே
அடையாளம் காட்டும்
கலவு பிம்பமே
காதல்...
♥
அது இது என்றில்லாமல்
எல்லாமும் அன்பில்
தொடங்கி,
அன்பாகவே அனைத்தும்
தெரிகின்ற
இன்ப நிலையே
காதல்..
♥
காதல் காதல்
காதல்
இந்த
காந்த சொல்லுக்குள்
ஒளிந்திருக்கும்
சொல்ல முடியா ஒன்றாய்,
உணர்த்தும் வெளிகாட்ட
முடியா காற்றாய்,
நம் ஆயுள் நிரப்பும்
அற்புத தவமே காதல்...♥♥♥