உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 12 பிப்ரவரி, 2015

வழிப்போக்கனின் வீதி



ஷேர் ஆட்டோ
ஓட்டுபவனுக்கும் நீட்டுபவனுக்குமான 
பயணம்


*

பானிப்பூரி கடைக்காரன் திண்ணத் தருகிறான்
செரிக்காத சோம்பேறித்தனத்தில்
முதலாளித்துவத்தை


*

கரும்புச்சாறு கடை
சக்கையாய் பிழியப்படுகிறான்
ரோட்டோ வியாபாரி..

*

வேகத்தடை
தடைபோடுவதில்லை
முக்காடுக்குள் ஒளிந்திருக்கும் வாலிபத்தை

*சந்தை வியாபாரமானது புகழ்ச்சி
அறிவுரைகளெல்லாம் இனி
அழுகல் காய்கறிகள் தான்

*

நவீனச்சந்தையில் பாடிஸ்ப்ரே நூறு கொடுத்துவாங்கியாகிவிட்டது
இனி கட்டிக்கொள்ளும் அழகிகளைத்தேடித்தான்
ஓடவேண்டியிருக்கிறது
விளம்பரமும்
வாலிபமும்

*

திருவோடு ஏந்திவந்தவரை
பிச்சைக்காரனென்றவன்
கடந்துசென்றான் காசுபோடாமலே....

*

கோஷம் போட்டவன்
திரையில் வேஷம் போட்டான் மக்கள் தான் சொத்தென்று
வாக்குகள் குவிந்தன
திரைப்படமோ வெள்ளிவிழா
இறுதியில் வாய்கரிசிதான் ஆள்கிறது
எல்லோரையும்

*

சுரண்டிக்கொண்டேயிருக்கிறோம்
தியேட்டரிலும் மால்களெனும் பெயரில் 
சிறுவர்த்தகத்தையும்

வாழ்க ஜனநாயகம்

*

மேடைப்பேச்சு
சத்தமாய் பேசுகிறது காசு

*

திருவிழா நேரம்
ரோட்டோர கடை
கல்லாகட்டுகிறது காக்கிச்சட்டை

*

விடுமுறைதினம்
விரயமாகிறது
பகிர்தலும்
பணமும்

*

தமிழனென்றால் விருந்தோம்பல் தான்
தண்ணீர் மட்டும் இனி
பத்து ரூபாய்

0 கருத்துகள்: