ஒரு இரயில்
பயணத்தின் போது
வந்தமறும் எல்லாரையும்
மெல்லிய புன்னைகையில்
கடக்கின்றேன்...
என் புன்னகையில்
உயிர் இல்லை
என்றாலும்,
பதில் புன்னகை
என் உள்ளம் தொடுக்கின்றது..
அருகில் இருக்கும்
எல்லாரையும்
அலட்சியப்பார்வை ஒன்றை
வீசி,
பேசுவதறக்கான தொடர்பை
துண்டிக்கிறேன்..
எதையோ மறைக்க நினைத்து
புத்தகத்தில்
புதையுண்ட கண்கள்
எதிர் வரிசை
குழந்தையின் அசைவுகளை
அளவெடுக்கிறது..
சிரிப்பதும், அழுவதும்,
கண்களை கசக்குவதுமாய்
அதன் அழகில்
என் பயணம் நீள
நீண்ட பெருமூச்சில்
தவறவிட்ட குழந்தைதனம்
என்னை பார்த்து சிரிக்கின்றது
பயணத்தின் போது
வந்தமறும் எல்லாரையும்
மெல்லிய புன்னைகையில்
கடக்கின்றேன்...
என் புன்னகையில்
உயிர் இல்லை
என்றாலும்,
பதில் புன்னகை
என் உள்ளம் தொடுக்கின்றது..
அருகில் இருக்கும்
எல்லாரையும்
அலட்சியப்பார்வை ஒன்றை
வீசி,
பேசுவதறக்கான தொடர்பை
துண்டிக்கிறேன்..
எதையோ மறைக்க நினைத்து
புத்தகத்தில்
புதையுண்ட கண்கள்
எதிர் வரிசை
குழந்தையின் அசைவுகளை
அளவெடுக்கிறது..
சிரிப்பதும், அழுவதும்,
கண்களை கசக்குவதுமாய்
அதன் அழகில்
என் பயணம் நீள
நீண்ட பெருமூச்சில்
தவறவிட்ட குழந்தைதனம்
என்னை பார்த்து சிரிக்கின்றது
இது தானே நீ
என்று,
சில நேரங்களில்
மறந்தே தான் போகிறோம்,
நிமிடத்தில் முடிந்துபோகின்ற
பயணத்தில்,
தொலைத்து போன
நம் குழந்தைதனங்களையும்,
எல்லாரையும் சமமாய்
பார்க்கின்ற மனதையும்
தொலைத்து விட்டு
மறத்தே தான் வாழ்கின்றோம்...
நிமிடத்தில் முடிந்துபோகின்ற
பயணத்தில்,
தொலைத்து போன
நம் குழந்தைதனங்களையும்,
எல்லாரையும் சமமாய்
பார்க்கின்ற மனதையும்
தொலைத்து விட்டு
மறத்தே தான் வாழ்கின்றோம்...






