உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்
அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 31 டிசம்பர், 2013

போய் வா நண்பா




ஒவ்வொரு வருடத்தின் இறுதியும் அச்சுறுத்துவதாய் இருக்கும் மாயக் குகையின் கைவிளக்காய் இருக்கிறது..

கடந்து வந்த கரடுமுரடான பயணங்கள் பலவற்றிலும் கை சேர்ந்த அனுபவம், துணிச்சலின் துணையோடு புத்தாண்டிற்குப் போக பணிக்க,
இன்னுமொரு குகை, புரியாத குகை வாழ்க்கை, வாழ்க்கை அங்கே நிறுத்தி வைத்திருக்கும் புலனாகா சூட்சுமங்களோடு, உடன் பயணிப்பவர் மொழியறிய, குணம் புரிய,  கையகப்படுத்திய சிக்கி முக்கிக் கல் உரசலில் பெறப்போ
கும் வெளிச்சங்களென, ஒரு டைனோசரின் மிச்சத்தை சுமந்தலையும் பல்லியாய் நமை மாற்றி வைத்திருக்கும் இவ்வாழ்க்கையை வியப்போடு பார்க்கிறேன்.

நாம் கண்டெடுத்த மொழியும், கற்றுத் தேர்ந்த அறிவும் ஒன்று சேர்ந்து உண்டாக்கிய சக்கரமே, வெளிச்ச உரசல்களுக்கு விடையாய் போக, அறிவு கண்டெடுத்த இச்சக்கரம் விதவிதமாய் நமை குழைத்து பாண்டமாக்கி உலவ விட, அதில் சேகரமாகிய விசயங்களைக் கொண்டு தான் திருந்தங்களெனும் ஏர், மன வயலை உழுகிறது...விதைக்கும் அனுபவங்களிலிருந்து முளைக்கும் ஒவ்வொரு பயிரெனும் வெற்றியின் நடுவில் நமை அசைத்துப் போடும் தோல்வியின் களை வளர்ந்துகொண்டே தானிருக்கிறது.. களையத் தெரிந்தவனையும் காலம் கொண்டாடிக்கொண்டேதானிருக்கி
றது..

சக்கரம் ஓடி ஓடி நம்மை கொண்டு வந்திருக்கும் இத்தூரம் பயணக் களைப்பை கொடுக்க, இளைப்பார கிடைக்கும் நிழல் தான் இவ்வருடத்தின் இறுதி நாளெனும் நினைப்பு வேரென எழுகிறது மனதிற்குள்...
மனம் இந்த வருடத்தின் ஒட்டுமொத்த காட்சியையும் குகையோவியமாய் மனதிற்குள் வரைந்து பார்க்கிறது.
எத்தனை எத்தனை நிறமான மனிதர்கள், அவர்களில் தான் எத்தனை விதமான குணங்கள் இத்தனையும் தாண்டி செஞ்சாந்து நிறத்தில் திலகமிட்டு விடும் அனுபவத்தைக் கொடுத்த இவ்வருடத்தை, பிரிய தோழமையை வழியனுப்பையில் உண்டாகும் மூச்சடைப்போடு வழியனுப்பி வைக்கிறேன்...

இவ்வருடம் முழுதும் வாழ்க்கையை உயிரோடு தான் நகர்த்தியிருக்கிறேன் என்பதற்
கு அடையாளமாய் வந்து சேர்ந்த ப்ரியங்களும், துயரங்களும், தோல்விகளும், வெற்றிகளுமாய் கைக்கோர்த்து அடுத்த வருடத்திற்குள் கைதூக்கி அனுப்பி விட,

என் ப்ரிய தோழனே போய் வா...

நேரம் கிடைக்கையில் எல்லாம் என் மனக் குரங்கு உன் கிளை தேடி வரும்......
நிச்சயம் உன் கிளைகள் எனக்காய் சில விசயங்களை ஒளித்தே வைத்திருக்குமென்பதை, புத்தன் மறைத்து வைத்திருக்கும் புன்னகைக்குள் இருக்கும் ஈரமெனக்கு உணர்ந்துகிறது..

போய் வா நண்பா....
எனை நீ அழைத்து வந்திருக்கும் இக்காலத்திற்காய் நன்றி...
மீண்டும் என்றேனும் ஒரு நாளில் கோப்பை தேனீரோடு என் அருகமர்வாய்...கதைபேசிச்
சிரிப்பாய்...

இப்போது உனக்கு சொல்லிக் கொள்வதெல்லாம் 

குழந்தை மொழியோடே
ஒரு குட்டி டாட்டா....................
....
போய் வா நண்பா..





 -ரேவா

புதன், 23 அக்டோபர், 2013

Wall ஆல் வந்தது

 

ரொம்ப நாள் கழித்து மனது சொன்ன ஒரு விசயத்தை எழுத்தில் ஏற்றுவது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாவும், நிறைவாவும் இருக்கு..முகனூல் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவத்தை தருது.. சிலருக்கு தன் துயரங்களின் வடிகாலாகவும், சிலருக்கு துயரங்கள் ஆரம்பமாகும் இடமாகவே கூட முகநூல் இருக்கு..ஆக யார் எங்க இருக்காங்கங்கிறது அவரவரின் தெளிவைப்பொறுத்த விசயமா இருக்க, இந்த முகனூல் வால் எல்லாத்துக்கும் முக்கியமான விசயமா மாறிப்போயிடுது இல்லையா, என் எண்ணத்தில், அசைபோடலில் இருக்கிற விசயத்தை எழுத்திலிட்டு சுவற்றில் பதிவு செய்தவுடனே அது எனக்கு சொந்த மில்லாத ஒன்னா போயிடும் பட்சத்தில் வாழ்க்கையும் அப்படி ஒன்னாத்தான் எனக்கு தெரியுது, அடடா ரேவா ஏதோ அட்வைஸ்ஸோ இல்லை வேற ஏதோ சொல்லப்போறான்னு நினைச்சா அப்படி எதுவும் இல்லவே இல்லை... இது முழுக்க முழுக்க என் பால்யத்தின் கரைகளை வேடிக்கை பார்க்கும் பதிவு தான் எனக்கு...

பொதுவா நம் உலகம் நம்ம சுற்றியிருக்கிற ஒரு 10, 20 குடும்பங்களோட முடிஞ்சு போயிடுறது இல்லாட்டியும் கூட ஆரம்பிக்கிற இடம் இதுவாத்தான் இருக்கும்.. அப்படி என்னை சுற்றியிருக்கிற ஒரு 20 குடுத்தினக்காரர்கள் மத்தியில் என் சிறுவயது நட்பாய், பகைவீழ்த்தியாய், சொத்தாய், என் எண்ணங்களை கை வழி பயணத்தின் மூலம் பிரதிபலிக்கிற ஒரு கரும்பலகையாய் எனை வளர்த்தது என் வீட்டிற்கு எதிரிலுள்ள காம்பவுண்ட் வால் தான்... ஒரு 15 குடுத்தினதாரர்களை மொத்தமாய் அடைத்து வைத்திருக்கும் அந்த கட்டடத்தில், என் போன்ற பிள்ளைகளுக்கு பெரிய அரணாய் இருந்ததே அந்த வால் தான்...

எப்போதும் பள்ளி முடிந்து சாயங்காலம் வீடு தேடி ஓடிவருகையில், இன்றைக்கான தன் களம் தயாராகிவிட்டதென்ற மகிழ்ச்சியில் வாஞ்சையாய் எனை பார்த்து அந்த சுவர் புன்னகைப்பதைப்போல் எப்பவும் எனக்கு தோன்றும்... பிள்ளைகளோடு சேர்ந்து கண்ணாமூச்சி விளையாட்டில் கண்களை மூடிக்கொள்ள, தோள்கொடுத்து நான் சாய்ந்துகொள்ள முதல் நட்பாய் இருந்தது அந்த காம்பவுண்ட் சுவர் தான்...

இன்றைக்கு சில நெல் மணிகளோடு ”அ” வென்ற எழுத்தை எழுதிப்பார்ப்பது சம்ரதாயமாய் மாறிவிட்ட சூழலில் என் முதல் அ வை முழுதாய் சுமந்து நிற்கும் அந்த சுவரை, என் பால்யத்தின் நீட்சியாகவே பார்க்கின்றேன்...

முதன் முதலாய் வந்து சேரும் முதல் அத்தனையையும் சேர்த்துவைத்திருக்கிற அந்த சுவற்றை வெறும் செங்கலென கடந்து செல்பவர்கள் மத்தியில் எனக்கு எப்போதுமே அச்சுவர் அப்படியாய் இருந்ததே இல்லை..

ஒரு நீளச்சுவரில் ஆளுக்கு இவ்வளவென்று பிரித்துக்கொண்டு, தனக்கான தன்னை வெளிக்காட்டிக்கொள்ள பெரும் உதவியாய் இருந்ததும், பங்கிட்டுக்கொள்வதிலிருக்கும் சந்தோஷத்தை குடும்ப அல்லாது சொல்லிக்கொடுத்த ஒரு உயிரற்ற ஜீவன் அச்சுவர் மட்டுமே..ஓடிப்பிடித்து விளையாடுதலில் ஜெயித்தவர்களின் பெயர்களை தாங்கி நின்று, அடுத்த போட்டிக்கு வென்றுவிட வேண்டுமென்ற உத்வேகத்தையும், அழகழகான வண்ணமலர்களை வரைந்து, பார்வை நீருற்றி அதை வதங்கவிடாமல் பாதுகாத்து, அனைத்துக்கும் உயிர்கொடுத்து பார்க்கச் சொன்ன தன்மையையும் எனக்குச் சொல்லிக்கொடுத்தது அச்சுவர் மட்டுமே...

கெளரவச் செங்கலால் எழும்பி நிற்கும் மனிதர்களைக் காட்டிலும் எனக்கு எப்போதும் அச்சுவரில் தனிப்பிரியம் தான்.பொய் வேசம் பூணத்தெரியாதது கூட அதன் மீது தனிப்பிரியம் வரக்காரணமாய் இருந்திருக்கலாம்... ஒவ்வொரு வயதின் முதிர்ச்சியிலும் ஆசைப்பட்ட, அசைப்போட்ட பல விசயங்கள் அங்கிருந்தே ஆரம்பித்தது, சாக்பீஸ்ஸைப்பிடித்து அ வென்று சொல்லி அனைவரையும் கவனிக்க வைத்த இடத்தில் நான் ஒரு ஆசிரியராய் ஆகவேண்டுமென்ற எண்ணம் துளிர்த்தது... அழகாய் வரைகிறாயென்று எதிர்வீட்டு அத்தை சொன்ன பொழுதொன்றில் ஓவியராய் வந்துவிடவேண்டுமென்ற ஆசை வளர்ந்தது... கண்டதில் காணாத ஒன்றை கண்டு சொல்லயில் கவிஞராய் வந்துவிடவேண்டுமென்ற கனவும் தொடர்ந்தது, இப்படி படிப்படியாய் ஆசைகளின் மேகக்கூட்டங்களை அத்தனையும் வாங்கிக்கொண்டு நான் வாழ்வில் என்னவாய் ஆகப்போகிறேனென்ற எண்ணத்தை தெரிந்துவைத்துக்கொண்டு ஒரு மர்மப்புன்னகை புரியும் தீர்க்கதரிசியாகவே எனக்கு தெரிகிறது அச்சுவர்...

பிள்ளைக்கண்ணீரை, பால்யக் கனவை, முதல் முதலில் ஆண்னென்பவன் என்னிலிருந்து வேறுபட்டவனென்ற உணர்வை, நட்புக்குள் கட்டுப்பாடு விதிக்க கற்றுக்கொண்ட எல்லைக்கோட்டை எனக்கு கொடுத்ததெல்லாம் அச்சுவர்... உயிரற்ற ஒன்றை போகின்ற இடமெல்லாம் தூக்கிச்சுமத்தல் கஷ்டமென்று தான் அந்த பாழாய்ப்போன கடவுள் நினைவைப்படைத்தானே என்னவோ, எப்போதெல்லாம் என் கண்ணீர் உடைபட்டு தெரிக்குமோ அப்போதெல்லாம் சாய்ந்துகொண்டு என் கண்ணீரை வாங்கியதும், இன்றும் அந்த ஈரக்கண்ணீரை ஒவ்வொரு மழை நாளின் போதும் தரிசிக்க கொடுப்பதும் எனக்கு வியப்பாய் தான் இருக்கும்..

வயதுகளை கடந்தும், வயோதிகத்தில் முதிர்ந்தும் போனாலும், சில கட்டுமானங்களால் மீள் தோற்றத்திற்கு திரும்பிவிடும் இச்சுவர் எப்போதும் எனக்கு பாஸிட்டிவ் வைப்ரேஷனை தரத்தவறுவதே இல்லை...

இதோ இப்போதும் தீபாவளி பண்டிகைக்காய், இன்னும் தான் வளர்த்துவிடக் காத்திருக்கும் புது புதுப்பிள்ளைகளுக்காய், வெள்ளை உடையெடுத்து போட்டுக்கொண்டிருக்கிறாள்... இவ்வெள்ளை வர்ணமென்னவோ என் வாழ்க்கைகான வசந்தம் வந்துவிட்டதாகவே என்னை நம்பச்சொல்கிறது....

அச்சுவரோடு நானும் வந்து அமரக்காத்திருக்கும் அவ்வர்ணத்திற்காய் எழுப்பிவைக்கிறேன் என் எண்ணச்சுவரை......



-ரேவா


செவ்வாய், 2 ஜூலை, 2013

பயணங்கள் முடிவதில்லை......

        



             பயணங்கள் எப்போதும் அழகானவை அதை ஏதாவது ஒரு விதத்தில் கூடுதல் அழகாக்கிப்போக  நம் எல்லாப்பயணத்திலும் ஏதோவொன்று சேர்ந்தே நம்மோடு பயணிக்கிறது. பயணங்களில் ஜன்னலோரத்து மழைதூரலாய் சிலிர்ப்பை ஏற்படுத்தும் சுகானுபவம் குழந்தைகளோடு பயணிக்கையில் மட்டும் கிடைக்கும் ஒன்று...வாழும் காலத்தில் வரங்களை கொடுப்பவர்கள் குழந்தைகளாக மட்டுமே இருக்க முடியுமென்பது எவ்வளவு பெரிய உண்மை...

           எத்தனை ஆழ்ந்த பார்வை அவர்களது, எத்தனை அழகான உலகம்,என்ன ஒரு  நேர்த்தியான சிந்தனை, , தோற்றுபோவதைக்கூட பாவத்தோடு சொல்லும் அந்த பாங்கிற்காகவாவது சின்ன சின்ன சீண்டல்களை செய்யச்சொல்கிறது மனம்.. குட்டி குட்டி பாவங்களில் தான் எத்தனை அழகான வசீகரம், பொதுவாக பயணங்கள் எல்லோருக்கும் பிடித்தமானது அதுவும் ஜன்னலோர இருக்கைகளோடு பயணிக்கையில் கிடைக்கும் சுகம் என்றைக்கும் தனியானது தான்...

          யாருமற்ற சாலை, அடர்மரங்கள் நிறைந்திருக்கும் இடங்களில் கதிரவனை தன் கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் கிளைகள், தன் கீழ் உள்ளவர்கள் மேல் கதிர்களை படவைக்காது பாதுகாத்து சாலையின் இருபுறங்களையும் அரவணைத்திருக்க, பேச எடுக்கும் வார்த்தைகளைக்கூட களைத்துப்போடும் காற்று காதுக்குள் புகுந்து இன்னிசை நடந்த, ஒப்பனை இல்லா புன்னகை எல்லோர் உதட்டையும் மெருகேற்ற, கூடுதல் அழகாய் குழந்தைகளும் இணைந்துகொண்ட பயணத்தில்  இளையராஜாவும் இணைந்துகொண்டால், அடடா, வாழும் நாட்களுக்குள் வந்து விழுந்த சொர்க்கம் தானே.
 

          எப்போதும் எதுவும் மாறாமல் பயணப்படும் இயந்திர வாழ்க்கையில் எப்போதேனும் வந்தமரும் இம்மாதிரியான பயணங்கள் ஏதோ ஒரு மாற்றுவிசையை மனதிற்கு தந்துபோகமட்டும் மறுப்பதில்லை... இன்றைக்கும் அப்படியான பயணம் தான் தங்கையின் கல்லூரி அலுவல் விசயமாய் சிவகங்கையை நோக்கிய பயணம், எதோ ஒரு வித அயர்ச்சி ஆரம்ப நேரத்திலே உடன் அமர்ந்து கொள்ள எதையும் கவனிக்காது பயணப்பட்ட நேரத்தில் தான் உள் நுழைந்தது அக்குட்டிப்புயல், கிட்டத்தட்ட அனைவரின் கவனத்தையும் ஈர்த்து தன் கட்டுப்பாட்டில் அனைவரையும் கட்டிவைத்தது...உள் தைத்த என் சோகத்தின் அடர் இருளை மறைத்து பிரகாசங்களை வாரிகொடுத்தது அம்மலர்செண்டு...அவள் இறங்குவதற்கான இடம் வந்ததும் தாவிவந்து என் மடி ஏறிக்கொண்டு அக்கா உன் போனை எனக்கு தரியா, உனக்கு சாக்லெட் தாரேன்னு சொன்ன அழகில் இன்னும் இனித்துக்கிடக்கிறது மனம்... எத்தனை அழகான தேவதைகள் குழந்தைகள் அவளை அணைத்துக்கொண்ட அந்த நிமிடத்திலிருந்து கும்மாளமிட்ட மனது கிட்டத்தட்ட என் கட்டுபாட்டை இழந்து துள்ளிக்குதித்ததை நினைத்து நானே வியந்துகொண்டேன்...

       கல்லூரியை அடைவதற்கான இரண்டு மணி நேரப்பயணமும் அந்த இளம் தளிரோடு போனதில் நேரமென்பதே தெரியாமல் போனது... ஒரு வழியாய் கல்லூரியில் வேலைகளை முடித்து திரும்பையில் அதே அயர்ச்சி, பேருந்திற்கான காத்திருப்பும் கூடுதலாய் அயர்ச்சிகொடுக்க, சேர் ஆட்டோவெனும் ஆபத்பாந்தவர்களை!?... நம்பியே ஆரம்பித்தோம் நானும் என் தங்கையும். இருவர் மட்டுமான பயணம் எப்போதும் நிரம்பி வழியும் ஆட்டோவில் நானும் அவளும் மட்டும் என்பதே கூடுதல் கனமாய் தெரிய, ஏதோ சொல்லத்தெரியா பயமொன்று உள் நின்று எக்காளமிட்டது... மனதைச்சுற்றி வட்டமடிக்கும் பல எண்ணங்களில் சுற்றிய எதுவும் லயிக்கவில்லை, ஆனாலும் எதிர் இருக்கை மட்டும் வந்த பயணத்தின் குழந்தையின் முகம் கொடுத்தது இடையிடையே ஆட்டோ ஓட்டு நரின் மொபைல் பேச்சு நிழலை உடைத்து நிஜத்தை காட்டி  கூடுதல் பயம் கொடுக்க, ரேவா நீ என்ன தான் வீராப்பா பேசுனாலும் நீயும் ஒரு பெண்ணுன்னு அம்மா சொல்லும் அந்த வார்த்தை ஏனோ இன்று அதிகம் வலிக்க கொடுத்து காற்றோடு அடி நாசிவரை ஊடுருவி கிளம்ப, இடையிடையே ஓட்டு நரின் பார்வை கண்ணாடி வழியே எங்களை ஊடுருவ, கதை மாந்தர் பலர் கதை சொல்ல ஆரம்பித்தனர் மனதில், திரைகாட்சி மனதில் விரிய, கத்தியில்லாமல் சத்தமில்லாமல் ஒரு சண்டைக்காட்டி மனதோடு மல்லுக்கட்ட, பயணம் ஆரம்பிக்கையில் எடுத்த மூச்சு எங்கோ ஒரு சாலையின் முடிவில் ஒரு மூதாட்டி வந்தமர்கையில் தான் சாவகாசமாய் விட முடிந்தது... அப்பாட்டியும் அவர் பாணியில் எங்களை கடிந்து பேச ஆரம்பித்தார்..

 ஏந்த்தா படிச்ச புள்ளகளா தெரியுறீகளே இப்படியா ஒரு வயசுப்பையன் ஆட்டோல தனியா ஏறுவீக, இப்போ இந்த கிழவிய அவன் தள்ளிட்டு எதாவது பண்ணிட்டா என்ன பண்ணுவீங்க காலங்கெடக்கிற கெடயில....ம்ம்ம்ம் நாங்களலாம் அந்த காலத்துலன்னு கூடுதல் பயமேற்றி வெற்றிலை பாக்கை குதப்பலானார்... யாரும் ஆட்டிவிடாமலே ஆடிக்கொண்டிருந்த பயத்தின் ஊசல் பாட்டியின் பேச்சில் கூடுதலாய் ஆடத்தொடங்கியது.. 

       ஒருவழியே நெடுச்சாலைகளை கடந்து மனித நடமாட்டங்கள் ஆரம்பிக்கையில் தான் சாய்ந்து கொள்வதற்கான தைரியம் மனதில் வந்தமர்ந்தது...இறுதியாய் இரண்டு மணி நேரப்பயணம் முடியும் தருவாய் பணம் கொடுத்து திரும்புகையில்  அந்த ஆட்டோ நண்பர் 
தங்கச்சி இன்னைக்கு எம்புள்ளைக்கு பொறந்த நாளுத்தா இந்தா மிட்டாய்ன்னு நீட்டினார்...
மனம் அறுத்துக்கொண்டே பதில் பேசாது வாங்கிவந்தேன் அந்த மிட்டாயை... மனிதர்களை எடைபேடுவதில் நாம் இன்னும் மோசமான மனிதர்களாகவேதான் இருக்கிறோமென்று நினைத்துக்கொண்டேன்...இதோ கணினித்திரைக்கு மிக அருகில் சிரித்துக்கொண்டிருக்கிறார்கள் மிட்டாய் பேப்பரில் அந்த குழந்தையும் அந்த ஆட்டோக்கார சகோதரனும்....

சனி, 9 ஜூன், 2012

பயணங்கள் புதிதில்லை...ஆனாலும் புதிதாய்.....


வணக்கம் உறவுகளே... அனைவரும் நலமா?.... கவிதை தளத்தில் பயணங்கள் பற்றி பகிர்ந்திட நினைத்ததின் நோக்கம், சில பயணங்கள் நாம் நினைத்ததையும் தாண்டி ஏதோ ஒரு மாற்றத்தை நிகழ்த்திவிட்டு போகும், அப்படி எனக்குள்ளான மாற்றங்களை எழுத்தில் ஏற்றிடத்தான் இந்த பதிவு... ஏற்கனவே என் சென்னை வாழ்க்கையை பற்றி தொடர ஆரம்பிச்சு இன்னைக்கு தொடரமுடியாமல் இருப்பது வருத்தமா இருந்தாலும், இதுவும் சென்னையப்பற்றிய பதிவுதான்ங்கிறது கொஞ்சம் ஆறுதலான விஷயமா இருக்கு...

சென்னை எனக்கு ரொம்ப பிடிச்ச ஊர்ன்னு சொல்லலாம்..எப்பவும் ஓடிட்டே இருக்கிற மனுசங்க, பரபரப்பா எதையாவது தேடிட்டே இருக்கிற முகங்கள், கொஞ்சம் அசந்தாலும் முளைச்சலவை மூலம் சாயம் போக காத்திருக்கும் வாழ்க்கைன்னு பல முகங்களை தனக்குள்ள வச்சுக்கிட்டு சக்கரமா சுத்துற ஊரு... சென்னையில வேலையவிட்டு வந்தப்பயெல்லாம் மாதம் ஒரு தடவைன்னு சென்னைக்கு போய் என் நினைவுகளை புதுப்பிச்சுட்டு வருவேன்... இப்ப அப்படியெல்லாம் இருக்க முடியலை... குடும்ப சூழல் ஒரு பக்கம் கழுத்தை நெறிக்க, சென்னை தந்த நினைவுகள் கொஞ்சம் கனக்கன்னு காலம் எப்படியோ போயிட்டு இருக்கு...வருடம் ஒன்னாச்சு சென்னைக்கு போயி.. என் நினைவுகளை சுமந்துகிட்டு இருக்கிற பழைய இடங்கள் எல்லாம் எப்படி இருக்கும்ன்னு அப்ப அப்ப நினைச்சு பார்க்கிறது உண்டு...

இப்ப மே மாதம் இறுதியில் சென்னைக்கு போகுற வாய்ப்பு கிடைச்சது... பல எதிர்பார்ப்புகளை சுமந்துகிட்டு தாயத்தேடி ஓடும் பிள்ளையா சென்னைய நோக்கி வந்தேன்...அப்பப்பா எத்தனை மாற்றம் இந்த ஒருவருட காலத்தில் சென்னை சந்திச்சிருக்கு... சென்னையில எனக்கு மனசுக்கு நெருக்கமான இடம்ன்னா டி. நகர் வீதிகள் தான், நான் வேலை பார்த்த பகுதியென்பதால் அங்கு அங்கு என் பிள்ளை குறும்புகள் கொட்டிக்கிடக்கின்ற இடம் அது...
டி நகர் வீதியில் தொடங்கி போக் ரோடுகள் வரை ரொம்ப பரிச்சையமான வீதிகள்.. காலமாற்றத்தில் வந்திட்ட மாற்றங்கள் தான் எத்தனை எத்தனை...

  நான் சென்னையில பணிபுரிந்த காலங்களில் தான் லூக்காஸ் பாலம் கட்டுமானப்பணிகள் ஆரம்பமாகின, அப்ப எல்லாம் அந்த இடம் வாகன நெருக்கடிகளால் மூச்சுத்தெணரி நிற்கும்.. இன்று பணிகள் நிறைவடைந்து அதோட பிரம்மாண்ட தோற்றத்தப்பார்க்கும் போது ரொம்ப மகிழ்ச்சியாகவும், பல சோகங்களை போக்க அந்த கட்டுமானப்பணிகளுக்கு வெளி ஊர்ல இருந்து வந்து டெண்ட் போட்டுகிட்டு வேலை பார்த்த அந்த சகோதரர்களின் முகமும் நினைவுக்கு வந்து போகுது...

எப்போதும் பஸ் பயணித்தில் அதோட அழகை ரசிச்ச எனக்கு என் தம்பியோட இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்தது மகிழ்ச்சியாகவும் புது சந்தோஷத்தையும் தந்தது..அவனுக்கு பழக்கப்பட்டுப்போன இந்த வசதிகளுக்கு பின்னான ஆரம்ப கட்ட செய்திகளை சொல்லிகிட்டே அந்த இடம் விட்டு நகர்ந்தேன்...

அடுத்து என்னோட பல நினைவுகளை ஒளிச்சு வச்சுகிட்டு இருக்கிற இடம் கோயம்பேடு வீதிகள், நாதன்ஸ் கபேல தொடங்கி கோயம்பேடு மார்கெட், விஜயகாந்த் கல்யாண மண்டபம், அப்பறம் ரோகிணி தியேட்டர் வரைக்கும் பஸ்க்காக காத்திருந்த நாட்களில் தோழமைகளோடு கதை பேசி நடந்ததுண்டு, இன்று மெட்ரோ ரயில் திட்டத்திற்க்கான வேலைகளால் பழைய முகத்தை கொஞ்சம் மறைச்சுவச்சுகிட்டு என்னை வரவேற்றது அந்த வீதிகள்.. சில நினைவுகளை மீட்டெடுத்து மீளமுடியா நினைவுகளோடு திரும்பி வந்தேன்... கோயம்பேடு நிறுத்ததில் அமர்ந்துகொண்டு பல சாயல் கொண்ட முகங்களையும் மனிதர்களையும் எவ்வளவு நேரம் வேணாலும் பார்க்கிற தியானம் எனக்கு ரொம்ப பிடிக்கும்...

அடுத்து கோடம்பாக்கம் வீதிகள், ஹாஸ்டலுக்காக அலையோ அலையோன்னு நண்பர்களோட அலைஞ்ச இடம், என் வயதிற்கே ஆனா குறும்புத்தனங்களால் பிரச்சனைகளை ஹேண்ட் பேக்ல போட்டுட்டு சுத்துன சந்தோஷ காலம்...கோடம்பாக்கம் ரயில் நிலையத்துல டிக்கெட் கவுண்டருக்கு எதிரில் இருக்கும் இரண்டாவது இருக்கைகளில் எப்போதும் அமர்ந்திருக்கும் என் நண்பனின் முகம் இன்னும் அவ்விடங்களை கடக்கும் போதெல்லாம் என்னை பார்த்து சிரிப்பதாய் ஒரு உணர்வு...இவ்வீதிகளும் மெட்ரோ திட்டத்தில் மாறித்தான் போயின.

டி. நகருக்கு அடுத்து நான் பணிபுரிந்த இடம் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ளது..ஆரம்பத்தில் இந்த வீதிகளின் மீது பெறிதும் ஈடுபாடு இல்லாமல் போனாலும் போகப்போக ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சிடுச்சு... சென்னையோட இன்னொரு முகம் ஜெமினி தொட்டாலே தெரிஞ்சிடும்..அந்த பரந்த வீதிகளில் பயணம் செய்யுறதே அலாதிதான், அதுவும் இரவு நேரங்களில் 29C க்கு காத்துகிடந்து கூட்டத்தில காணமப்போற பலருல நானும் ஒருத்தி...
எப்படியோ வாழும் சூழலை மாத்திக்க பலரும் போன சென்னைக்கு நானும் போனேன்..ஆனாலும் என் மதுரைக்கு அடுத்து நான் அதிகம் நேசிக்கிற இடம் சென்னை தான்...ஆரம்பகாலத்தில் சென்னை மீது வெறுப்பு வந்தாலும் வாழும் முறைய சொல்லிக்கொடுத்தது சென்னை தான்...தோல்விகளும் வலிகளும் அதிகம் என்றாலும் வாழ்வை சொல்லிகொடுத்தது சென்னை தான்......

சென்னை பத்தி சொல்லனும்னா சொல்லிட்டே இருப்பேன்...இந்த பயணம்  நான் நினைச்ச படி இருந்ததான்னா இல்லைன்னு தான் சொல்லனும், இங்க பழைய நினைவுகளை புதுப்பிச்சுக்கிட்டாலும் அந்த நினைவுகளை தந்த பல உறவுகள் இன்னைக்கு காலப்பிரட்சியால காணமப் போனதும், பல நண்பர்களின் கல்யாணத்தின் மூலம் நட்புக்கு முற்று புள்ளி வைத்ததும், பலர் தொடர்பை துண்டித்தும், துண்டிக்கப்பட்டும் தொலைந்து போன நட்பின் தொலையா நினைவுகளால் ஒருவாறு மனம் கனத்து போய் தான் அந்த நினைவுகளை எடுத்துட்டு வந்தேன்... இறுதியா சொல்லனும்னா I Miss You...................


I miss you all the time, but I miss you most when i lay awake at night and think of all the wonderful times we spent with each other; for those were some of the best times of my life.


எதிர்பாராமல் சென்னை வந்ததால் பல உறவுகளை சந்திக்க முடியவில்லை, அதற்கு இந்த பதிவின் மூலம் மன்னிக்க வேண்டுகிறேன்...


திங்கள், 14 மே, 2012

இங்கே மாப்பிள்ளை வாங்கப்படும்.....



                  இணையத்தில் படிக்கும் பழக்கம் கொண்ட எனக்கு கணவன்கள் விற்க்கப்படும்ங்கிற நகைச்சுவை தாங்கிய ஒரு பதிவ படிக்க முடிஞ்சது... பெண்களை எப்பவும் திருப்தி படுத்தவே முடியாதுங்கிற ஒன்லைன் ஸ்டோரி....படிச்சதும் பெண்கள் மட்டும்தான் இப்படியான்னு எப்பவும் ஏற்படுற கோவத்தோட உதட்டோர புன்னகையுமா அந்த தளத்தை விட்டு வெளிய வந்தேன்..அதே இடத்தில ஆண்களை பொருத்தி பார்த்தேன், எதிர்பார்ப்பு ரெண்டு தரப்புக்குமே பொதுவான ஒன்னுதானே... அன்பான ஆண்களை பெண்கள் தேடுனா, அழகான அன்பான பெண்களை ஆண்கள் தேடுவாங்க... சோ இங்க யாரையும் எதுலையும் திருப்தி படுத்த முடியாது, அவங்க அவங்களா நமக்கு கிடைச்சத வச்சு திருப்தி பட்டுக்கிட்டா தான் உண்டு....

கணவன்கள் விற்கப்படும்...... ஹஹா தலைப்பு நல்லா இருக்கா... ஆண்கள் கல்யாணச்சந்தையில விற்கப்படும் கடைச்சந்தை பொருளா போயிட்டாங்களா? இல்லை பெண்கள் தான் தனக்கு வர்ற மனுசன கடைச்சந்தை பொருளா மாத்திட்டாங்களா? ஒன்னும் புரியல...

ஆனாலும் காலம் காலமா நடந்துகிட்டு இருக்கிற விவாதம் தான் இந்த கல்யாணச்சந்தை...கடவுளே தன் கல்யாணத்துக்கு வரதட்சணை வாங்கினார்ன்னு சில தகவல்களை நம்மளும் கேள்விப்பட்டுருப்போம்... நான் வரதட்சணை வாங்க மாட்டேன்னு ஒரு முற்போக்கான ஆணாளையும் சொல்ல முடியாது, வரதட்சணை கொடுக்க மாட்டோம்ன்னு ஒரு பொண்ணாலையும் சொல்ல முடியாது....... ஏனா சமூகம் எந்த ஒரு ஆரோக்கிய நகர்வுக்கு பின்னாலையும் ஒரு அதிபாதாள குழியத்தேண்டி போட்டு எவண்டா மாட்டுவான்னு ஒக்காந்திருக்கும்..... நான் இப்படி நடக்கனும்ன்னு சொன்னா ஏன் அப்படி நடக்கக்கூடாதான்னு கேள்விய சுருக்கு கயிறா நம்ம கழுத்துல கட்டிவிடும்...இப்படி அடுத்தவங்க கேள்விக்கு பயந்தோ இல்லை அந்த பயத்த நமக்கு சாதகமா எடுத்துக்கிட்டோ தான் இந்த சந்தை வியாபாரம் இன்னமும் களைகட்டிகிட்டுயிருக்கு.........

ஆண் பிள்ளைகள் பெற்றவங்க என்னமோ நாடாளும் அரசர்கள் மாதிரியும், பெண் பிள்ளைகளை பெற்றவங்க என்னமோ அவங்களுக்கு வரி கட்டி உயிர் வாழும் சிற்றரசர்கள் மாதிரியுமான அமைப்ப நாம பழக்கப்படுத்தி வழக்கப்பட்ட இந்த சமூகம் (முன்னோர்கள்) நமக்கு தந்திட்டு போயிடுச்சு....இன்னுமும் இந்த வழக்கம் நம்ம விட்டு போகலைன்னு தான் சொல்லலாம்...

இன்னைக்கு கல்யாண சந்தையில, ஒரு ஜோடி புதுசா இணைச்சாலும் காசு, புடிக்கலைன்னு பிரிஞ்சாலும் காசு...பணத்தை சுத்தியே இந்த பந்தத்தை நாம கட்டிப்போட்டுட்டோமா? இல்லை என்கிட்ட இருக்குங்கிறத காட்டி இல்லாதவங்களையும் இருக்கிறமாதிரி காட்டிக்க வைக்கிறோமா?

ஆனாலும், அர்த்தமுள்ள வாழ்க்கைங்கிறது ஆணுக்கும் பெண்ணுக்கும் கல்யாணத்தில தான் கிடைக்குது... இத கேலிக்கூத்தா ஆண்கள் எண்ணலாம், ஆனாலும் பெண் சரியில்லாத எந்த ஒரு இடமும் நரகம் தான், ஆனா பெண்ணுக்கு அப்படியில்லை ஒரு ஆண் எப்படி இருந்தாலும் அதோட எந்த பாதிப்பும் இல்லாம அவ சுத்தி இருக்கிற இடத்த பாத்துக்க முடியும்... (சில நேரங்களில் சில கருத்துகள் மாறுபடலாம்)..

எந்த வித ரத்த சம்மந்தமும் இல்லாம ஆத்மார்த்தமா உருவாகிற ஒரு உறவ இன்னைக்கு விலை பேசும் நிலைக்கு மாத்துனதுக்கு யார் தான் காரணம்...... 

இளைங்கலை படிச்சா ஒரு ரேட்டு, முதுகலை படிப்பு முடிச்சா ஒரு ரேட்டு, வசீகரமா இருந்தா ஒரு ரேட்டு, பையன் படிச்சு பாரின்ல இருந்தா டபுள் ரேட்டுன்னு ஆண்களை பெத்தவங்க அவங்களுக்கு கல்யாண் புரட்டி போராட்டம் மாதிரி பிரைஸ் டேக் போட,

பொண்ணுங்கள பெத்தவங்களும், பையன் தனியா இருங்காரா, கல்யாணம் முடிச்சதும் தனிக்குடித்தனம் வந்துருவாரா? ஒரு பையனா இருக்காரா? கம்பெனில இங்கிரிமென்ட் கிடைக்குமான்னு அவனையும் ஒரு பணம் பார்க்கும் மிஷனா தான் பார்க்குது..

இந்த நிலை என்னைக்கு மாறும், மாறனும்ன்னு நினைச்சா,  மாற்றம் முதலில் நம்மகிட்ட இருந்து வரனும் அப்போ தான் அது ஆரோக்கியமான மாற்றமா இருக்கும்... இன்னைக்கு வரதட்சணை வாங்குனா இவ்வளவு வாங்கிட்டான்னும் , வாங்கலைன்னா பையனுக்கு ஏதோ குறைன்னு நினைச்சுடுவாங்கன்னும் சொல்லுறாங்க அப்போ தன் தேவைக்கு சமூகத்தின் மேல பழி போடுற மனப்பாங்கு தான் நம்மில் பலருக்கும்... இது பெண் வீட்டாருக்கும் பொருந்தும்...

ஆனாலும் ஒரு வியாபார ரீதியில இந்த உறவுபாலத்தை நாம கட்டிபோட்டுக்க அனுமதிக்கக்கூடாதுங்கிறது மீ ஆசை...முடிஞ்சவரை மனிதர்களின் மனங்களுக்கு மதிப்பு கொடுக்க கத்துகிட்டு, இந்த பணத்தை ஒரு பெரிய அங்கமா கல்யாண உறவுக்குள்ள கொண்டுவராம இருப்போம்...

எது எப்படியோங்க, இன்னைக்கு இருக்கிற நிலை ஒன்னும் சொல்லுறதுக்கு இல்லை...ஆண்களே எங்க கண்ண மூடிட்டு உங்களுக்கு என்ன விலைன்னு நீங்களே யோசிச்சு பாருங்க.. உங்க விலைக்கு எப்படி பொண்ணு மாட்டும்?....!?!!!!!!?? உங்க விலைக்கு தகுந்த பொண்ணு கிடைக்க இது வியாபாரம் இல்லை விபச்சாரமும் இல்லை........ வாழ்க்கை பாஸூ.... சோ?.... மீ டோன் டெல் அட்வெஸ்....


அம்மா அம்மிணிகளே எங்க அப்படியே கொஞ்சம் உள்ளுக்குள்ள இருக்கிற மனச கொஞ்சம் தூசி தட்டி கேட்டுப்பாருங்க, பையன பெத்த அம்மா அப்பா கூட இருக்கக்கூடாது, பையன் கூட பாரின்ல போய் செட்லாகி ராயலா ஒரு வாழ்க்கை வாழனும்னு நினைக்கிறேங்களா? பையன் சைடு சொந்தம் மட்டும் ஆகவே ஆகாதுன்னு நினைக்கிறேங்களா?... அப்போ சீக்கிரம் ஜீவன் தாரா பாலிசி மாதிரி, ஒரு முதியோர் இல்லத்தையும் ஒரு அட்வான்ஸ் புக்கிங்க் பண்ணிடுங்க....................

 
நம்ம என்ன கொடுக்குறோமோ அது தான் நமக்கு திரும்பக்கிடைக்கும்.... 
ஹி ஹி இது டவுரிக்கும் பொருத்தும், பின்னாடி டவுசர் கிளியிறப்ப புரியும்............. வரட்டா.................



திங்கள், 12 மார்ச், 2012

நினைத்தாலே இனிக்கும்


 நன்றி : கூகிள் டீச்சர்


ரேவதி மணி எட்டாச்சு எந்திரி, ஆயாம்மா வந்திடுவாங்க, ஸ்கூலுக்கு போகன்னும்ல,

போமா இன்னைக்கு எனக்கு காய்ச்சல் நான் போகமாட்டேன்...

ஒழுங்கா எந்திரி இல்லாட்டி அடி வாங்குவ,

ஜய்ய போ, நான் போகமாட்டேன்.....

எழுந்திரிடி, பொம்பள பிள்ளைக்கு என்ன வீம்பு, கொன்னுடுவேன்...

 நான் போகமாட்டேன் போகமாட்டேன் போகமாட்டேன், அப்படியும் மீறி என்ன ஆயாக்கூட அனுப்பு விட்ட நான் அது கைய கடிச்சிட்டு எங்காயாவது ஓடிப்போயிடுவேன் போ...

கொடுமைக்காரி,  lkg படிக்கையிலயே என்ன இந்த பாடு படுத்துறயே, இன்னும் போகப்போக என்ன பாடு படுத்துவ...

என்னடி அங்க சத்தம்....

சும்மா பேசிட்டு இருந்தேங்க...

ஏங்க உங்க புள்ள ஸ்கூலுக்கு போகமாட்றா...

 இப்படி தாங்க ஆரம்பிச்சது என் பள்ளி பருவம்... பிரகாஷ் அண்ணன் மாதிரி வகுப்பு வகுப்பா சொல்ற அளவுக்கு நம்ம கிட்ட சரக்கு கிடையாதுங்கோ...அதால பள்ளின்னு நினைவுக்கு வந்தாலே உதட்டோரம் புன்னகை வரும் சில நிகழ்வுகளை பத்தி சொல்றேன்....

படிப்புல சுட்டின்னு சொல்ல முடியாது, ஆனாலும் ரேவதின்னா நான்னு அடையாளம் தெரியிற அளவுக்கு படிப்பு இருக்கும்...L.KG UKG  இங்கிலிஸ் மீடியத்துல படிச்சேன், பொம்பள பிள்ளைக்கு அப்படி பணத்தைகொட்டி படிக்க வைக்கனுமான்னு என் அப்பத்தா சொல்ல, அடியேனின் படிப்பு தமிழ் மீடியத்துக்கு தாவுனது...

ஒன்னாப்பு படிக்கும் போது என் கிளாஸ் மிஸ் என்ன தூக்கி வச்சிக்கிட்டே இருப்பாங்க, நாங்க அவ்ளோ அழகு அப்போ ஹி ஹி , ( யாருப்பா அங்க, சிறுசில பன்னிக்குட்டிக்கூட தான் அழகா இருக்கும்ன்னு சொல்றது )..

பெரும்பாலும் நட்புன்னு யாரையும், அடையாளம் காணமுடியாத வயசு, சிலேட்டு குச்சிக்கு சினேகம் பிடிக்கிற மனசு, பள்ளி நாளே ஏதோ வெறுப்பா இருக்கும், அதுவும் லீவு முடிஞ்சு, திங்க கிழமை ஸ்கூலுக்கு போறது,விசத்த சாப்பிடுற மாதிரி இருக்கும், என்ன படிக்க வைக்க பட்ட பாட விட, ஸ்கூலுக்கு விட பட்ட பாடு என் அப்பாவுக்கு தான் தெரியும்..

இதுவரைக்கும் என்ன என் அம்மாவும் சரி அப்பாவும் சரி அடிச்சது கிடையாது, முத முதலா விரத்த தழும்பு வாங்கினது அஞ்சாங்கிளாஸ் படிக்கும் போது, இன்னைக்கும் அந்த நிகழ்ச்சிய நினைச்சா, சிரிச்சிட்டே இருப்பேன், அப்படி என்ன நடந்ததுன்னு கேட்கிறேங்களா?.. மீசிமா மீ பெ வா ன்னு 5வகுப்பு கணக்கு இருக்கும், அத டீச்சர் எழுதிப்போட்டு எல்லாரையும் விடை கண்டுபிடிக்க சொல்லிட்டு இருந்தாங்க, நானும் கண்டுபிடிச்சாச்சு, நம்ம பிரண்ட் முடிக்கல, சரி அவளும் முடிக்கட்டும், 2பேரும் சேர்ந்து போய் கையெழுத்து வாங்கலாம்ன்னு காத்துகிட்டு இருந்தேன், பயபுள்ள முடிக்கிற மாதிரி தெரியல, என் நோட்ட பாத்து எழுதுடின்னு சொல்ல, அவளும் பாத்து எழுத, என் கிரகம் அத மிஸ் பாத்துருச்சு, என்ன ரேவதி புது பழக்கம்ன்னு குச்சிய வச்சு தலையில அடிச்சாங்கப்பாருங்க, அடங்கொன்னியா, உங்க வீட்டு ரத்தமில்ல எங்க வீட்டு ரத்தமில்ல, கணக்கு நோட்டு ஃபுல்லா ஒரே ரத்தம், கடைசில வீட்டுக்கு தெரிஞ்சு அப்பா பள்ளிக்கூடத்துக்கு வர, பள்ளிக்கூடத்துக்கு வர, பள்ளிக்கூடத்துக்கு வர, அட இருங்கங்க சொல்லிக்கிறேன், எங்க ஸ்கூல்ல இருக்கிற எல்லா டீச்சருக்கும் எங்க அப்பா தான் நகை செஞ்சு தருவாரு, அதால எல்லா டீச்சரும் அப்பாக்கு தெரியும் எல்லார்ட்டையும் போய் அந்த மிஸ் பண்ணுணத சொல்ல, ஸ்கூலே அல்லோலப்பட்டு, அந்த மிஸ் அழுக ஆரம்பிச்சிடுச்சு. அப்பறம் நமக்கு ஒரு வாரம் லீவு அய் ஜாலி...

இந்த மாதிரி நம்ம ரவுச சொல்லன்னும்னா அதுக்கே ஒரு தொடர் பதிவு போடனும், அதால அடுத்து 8கிளாஸ் வாங்க, நான் படிச்ச அந்த கிறிஸ்டியன் ஸ்கூல்ல, அங்க  8ம் வகுப்பு வரை தான், அதால 8 படிக்கிற புள்ளைகள டூர் கூட்டிட்டு போவாங்க, அப்படிதான் அன்னைகும் டூர் கூட்டிட்டு போறாங்க நானும் போகனும்ன்னு சொன்னோங்க, என் அப்பாட்ட, என் அப்பா என்ன விட மாட்டின்டாறு. விடுவோமா நம்ம, நானும் நல்ல புள்ளையா கெஞ்சிப்பார்த்தேன், அடுத்து அழுது பாத்தேன் என் அப்பா மசியல, சரி இது சரிபட்டு வராதுன்னு ஸ்கூலுக்கு கிளம்பிட்டேன், நான் ஸ்கூல் வேன்ல தான் எப்பவும் போவேன், அவங்களுக்கு நான் இறங்கிற இடம் தெரியும்ல, சாயங்காலம் எப்பவும் நான் இறங்கிற இடத்துல இறங்காம, என் பாட்டி வீட்டுக்கு அப்பா வர சொல்லிட்டாங்கன்னு சொல்லி இறங்கிட்டேன்...

 நான் வீட்டுக்கு வர டைம் ஆகியும் வாராததலா, அப்பா ஸ்கூலுக்கு வர, நான் கிளம்பி போயிட்டேன்னு சொல்ல, ஹி ஹி இருங்க சிரிச்சுகிறேன்....காதல் படத்துல ஜஸ்வரியாவ காணோம்ன்னு அவங்க அப்பத்தா கத்துமே அது மாதிரி கத்தி என் அப்பத்தா ஊறயே கூட்டிட்டாங்க... நான் என் அம்மாச்சி வீட்டுல உக்காந்து தாத்தாட்ட ஊறுக்கு போக, காசு தேத்திட்டு இருந்தேன்,ஹி ஹி. நான் சொல்லாம வந்தது தாத்துவுக்கு தெரிய, கடைசி, என் தாத்த என்ன கூட்டிட்டு என் வீட்டுக்கு போக, இங்க தாங்க சர்பிரஸ் இருக்கு, சரி எல்லாரும் சேர்ந்து நம்மள கும்ம போறாங்கன்னு நினைச்சேன், ஹி ஹி ராங் கால்குளேசன், குடும்பமே கட்டி புடிச்சு அழுவுது... உடனே அப்பா கிளைமேக்ஸ் ல வர சிவாஜி  சார் மாதிரி, அழுதுட்டே நீ டூர் தானே போகன்னும் போ போ போயிட்டு வான்னு சொன்னாறு பாக்கன்னும் அங்க நிக்கிறா ரேவதி...அப்பறம் ஒரு வழியா டூர் போயிட்டு வந்தாச்சு, 8ம் வகுப்பும் நல்ல படியா படிச்சு முடிச்சாச்சு...


அடுத்து 9க்கு வேற ஒரு ஸ்கூல் இந்த பள்ளிக்கூடத்துல இருந்து வேற ஒரு சுழலா தெரிஞ்சது அந்த ஸ்கூல்.. என் பழைய ஸ்கூல்ல எல்லா டீச்சரையும் எனக்கு தெரியும், எல்லாரும் அந்த டீச்சர்ங்கிற உறவை தாண்டி ஒரு நட்போட இருப்பாங்க, இந்த ஸ்கூல் அப்படி இல்லை, ஏதோ ஆயுச முடிக்க எமனோட இருக்கிற சித்திரகுப்த்தன் கையில கணக்கு நோட்டேட சுத்துவாறுங்கிற மாதிரி எல்லா டீச்ச்ர் முகத்துலயும் ஒரு இறுக்கம், அப்பறம் அதுவே பழகி ஒரளவுக்கு நட்பு வட்டம் கிடைச்சிருச்சு.. சின்ன பிள்ளையாய் இருந்து, இதுதான் உலகம்ன்னு கொஞ்ச கொஞ்சமாய் புரிய ஆரம்பிச்சது, என் விளையாட்டுத்தனமும் வீண்புத்தனமும், அடியோட மாறிப்போச்சு, அடுத்து 10 கிளாஸ், இதுவரைக்கும் படிப்ப பத்தி எந்த அக்கறையும் இல்லாம அலட்டிக்காம படிச்சு நல்லாவே ஸ்கோர் பண்ணுணேன், ஆனா இந்த 10 வகுப்புல குடும்ப சூழல் கொஞ்சம் மாற, நம்ம வீட்டுல மூத்த பொண்ணாச்சே, அங்கயும் கவனிச்சு, இங்கயும் கவனத்த செலுத்த முடியல.
கால் ஆண்டு தேர்வுல, கணக்குல ஒற்றை படை எண் தான் நம்ம மதிப்பெண், நம்ம முடியாத அதிர்ச்சி, கிட்டதட்ட செத்துகூட போயிடலாமான்னு யோசிக்க வச்ச தருணம்ன்னு சொல்லலாம்...

ஸ்கூல் நிர்வாகம் அப்பாவ வரச்சொல்ல, அப்பாக்கு பெரிய அசிங்கத்த உண்டு பண்ணிட்டேன்னு மனசு கெடைந்து தவிக்கிது, என்ன காரணம்ன்னு என் வகுப்பு மரகதம் டீச்சர் அப்பாட்ட கேக்க, அப்பா வீட்டு சுழல அவங்கட்ட சொல்ல, மிஸ் என்ன பாத்து, இந்த வயசுல புள்ளைங்கள படிக்க விடுங்க, உங்க குடும்ப பாரத்த அது தலையில ஏத்தாதிங்கன்னு சொல்ல, ரேவதிக்கு டீசிய வாங்கிட்டு போங்க, அடுத்த வருசம் வந்து சேர்த்துக்கோங்கன்னு சொல்லிட்டாங்க, அப்பறம் ஒரு வழியா அப்பா பேசி சமாதனம் பண்ணி வச்சு, உத்திரவாதம் கொடுத்துட்டு போனாரு, அன்னைக்கு  முடிவு பண்ணுனேன், இனி என் அப்பா ஸ்கூலுக்கு வந்தா, இவர் பொண்ணு தான் ரேவதியான்னு சொல்ற அளவுக்கு இருங்கன்னும்னு நினைச்சேன் அத செயல்ல காட்டவும் ஆரம்பிச்சேன். ராத்திரி பகலா படிச்சேன், கிட்ட தட்ட சைக்கோ அளவுக்கு, என் குடும்பமே நான் படிக்கையில முழிச்சிருப்பாங்க, என் வயசான அப்பத்தாவையும் சேர்ந்து, அப்பறம் பப்ளிக் எக்ஸாம் முடிஞ்சது, ஒரளவுக்கு நல்ல மார்க் கிடைச்சது..

அடுத்து நமக்கு சின்ன வயசுல இருந்தே ஆடிட்டர் ஆகனும்ன்னு ஆசை, அது என்னவோ தெரியல, அரசியல்வாதில இருந்து, எல்லா துறை சார்ந்தவங்களும் சம்மந்த பட்ட ஒரு ஆளுனா ஆடிட்டர் தான். அதால காமர்ஸ் குருப் எடுத்தாச்சு, அக்கவுண்ட்ஸ் விரும்பி படிச்சதால புரிச்சுச்சா, இல்லை எப்படி புடிச்சதுன்னு தெரியல ஏன்னு கேக்குறேங்களா? என் அக்கவுண்ட்ஸ் மிஸ் எப்பவும் தண்ணி அடிச்சா பசங்க எப்படி மப்புலயே இருப்பாங்க அது மாதிரியே இருக்கும், கடைசில எல்லாரும் சேர்ந்து ஹெட் மிஸ் கிட்ட சொல்ல, அவங்களும் அவங்க எடுக்கிற கிளாஸ் அஹ கவனிக்க, எங்க பொண்ணுங்களுக்கு பற்று வரவு எங்க போடனும்னு கூட தெரியாத அளவுக்கு அவங்க கோச்சிங் இருந்தது. அப்பறம் அந்த டீச்சர மாத்த 4 மாசம் பிடிச்சது, அந்த நாளு மாசம் வரைக்கும் நானும், என் பிரண்ட்சும் தான் பாடம் எடுப்போம். இப்படியே 11 வகுப்பு நல்ல நட்புகளோட அந்த வயசுக்கே உண்டான குறும்பு தனத்தோட நிறைவடைந்தது.

அடுத்து 12ம் வகுப்பு, அந்த வகுப்புக்கோ உண்டான டென்சன், எப்பவும் புத்தகத்தோடயே முட்டிமோதுற காலம்ன்னு ரொம்ப வேகமா போனது, ஆனா அங்கயும் என் குறும்பு தனத்துக்கும், சேட்டைக்கும் அளவில்லாம தான் போனது, இந்த காதலர் தினம், காதலர் தினம்ன்னு ஒன்னு வருமே,அந்த ஒரு தினம் நாங்க படிக்கும் போதும் வந்தது, மீசை முளைக்காதது எல்லாம் லெட்டரோட சுத்துது.. நம்ம எப்பவும் படையப்பால வர ரஜினி மாதிரி பெரும் படையோட தான் சுத்துவோம், பெண்ணுகளுக்கு காதல சொல்ல காத்துகிடக்கிற நெறையா பசங்கள ஒட ஒட விரட்டுன காலம் அது..அதோட எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாம, வேறுபாடுகள் இல்லாம, நமக்கு ஒன்னுனா உயிர் வரை துடிக்கிற பாசமான நட்புகளை கொடுக்கிறதும் இந்த பள்ளிக்காலம் தான், பரிட்சையும் வந்தது, பொண்ணுங்களுக்கே உண்டான கண்ணீரோடு, ஆட்டோகிராப் நோட்டுக்குள்ள அடைக்கலம் புகுந்தது எங்க நட்பு.
உனக்கு கல்யாணம்னா நான் வரேன், எனக்கு முந்தி கல்யாணம்னா நீவான்னு பெறும் பாலான வாசகங்களால நிறைச்சது ஆட்டோகிராப் புத்தகம்... பள்ளி இறுதி தேர்வுல, பள்ளியில இருக்கிற அத்தனை இடத்துக்கும் கண்ணீரோட விடைகொடுத்துட்டு வந்து, மாசம் ஒரு கிழமை சந்திப்போம்ன்னு வழக்கமான பாணில விடைகொடுத்தோம் நட்புக்கு...

என்ன தான் நம்ம வாழ்க்கையில எத்தன நட்பு வந்தாலும், எதையும் எதிர்பார்க்காம, எந்த விகர்ப்பமும் தெரியாம அமையிற நட்புன்னா அது பள்ளி பருவ கால நட்பு தான், அதே மாதிரி ஒரு மனுசன் அசைபோடுற மறக்கமுடியா நிகழ்வுகள்ல பசுமையான நினைவுன்னா அதுவும் பள்ளிக்காலம் தான்... பல பதிவுகள் எழுதுனாலும் நம்ம மனசுக்கு நெருக்கமான பதிவுகள் ல இந்த பதிவும் ஒன்னுன்னு நிச்சயம் சொல்லலாம்...நெஞ்சுக்கூட்டில் இனிக்கும் நினைவுகளுடன்,  என் சுய புலம்பலை தொடர் பதிவா எழுத அழைப்பு விடுத்த தமிழ்வாசி அண்ணனுக்கு நன்றிகள்...


(பதிவின் நீளம் அதிகமே, என்னை மன்னிச்சு சகோஸ்ஸ்ஸ்ஸ்)



சனி, 25 பிப்ரவரி, 2012

தொலைக்கப்பட்டவைகள் சில....



ஒரு இரயில்
பயணத்தின் போது
வந்தமறும் எல்லாரையும்
மெல்லிய புன்னைகையில்
கடக்கின்றேன்...

என் புன்னகையில்
உயிர் இல்லை
என்றாலும்,
பதில் புன்னகை
என் உள்ளம் தொடுக்கின்றது..

அருகில் இருக்கும்
எல்லாரையும்
அலட்சியப்பார்வை ஒன்றை
வீசி,
பேசுவதறக்கான தொடர்பை
துண்டிக்கிறேன்..

எதையோ மறைக்க நினைத்து
புத்தகத்தில்
புதையுண்ட கண்கள்
எதிர் வரிசை
குழந்தையின் அசைவுகளை
அளவெடுக்கிறது..

சிரிப்பதும், அழுவதும்,
கண்களை கசக்குவதுமாய்
அதன் அழகில்
என் பயணம் நீள
நீண்ட பெருமூச்சில்
தவறவிட்ட குழந்தைதனம்
என்னை பார்த்து சிரிக்கின்றது
இது தானே நீ
என்று,

சில நேரங்களில்
மறந்தே தான் போகிறோம்,
நிமிடத்தில் முடிந்துபோகின்ற
பயணத்தில்,
தொலைத்து போன
நம் குழந்தைதனங்களையும்,
எல்லாரையும் சமமாய்
பார்க்கின்ற மனதையும்
தொலைத்து விட்டு
மறத்தே தான் வாழ்கின்றோம்...

ஞாயிறு, 29 ஜனவரி, 2012

அவரவர் அனுபவம்





நண்பன் என்று 
பெயரிட்டு 
அறிமுகப்படுத்தியும் ,
ஆணுக்கும், பெண்ணுக்குமான
நட்பை சில உறவுகளிடம்
நியாயப்படுத்தவே முடியவில்லை..
அனைவரின் பயமும் 
அவரவர் அனுபவங்களில் 
கிடைத்த அவர்களாகவே இருக்கிறார்கள்..  









புதன், 11 ஜனவரி, 2012

கனாக்காலங்களில் என் சென்னை காலம்


வணக்கம் வணக்கம் வணக்கம்...என்னடா இத்தன தடவ வணக்கம் சொல்றாலேன்னு பாக்குறேங்களா ? அட வேற ஒன்னும் இல்லைங்க, நமக்கு பிடிச்ச ஒரு விஷயத்த பத்தி பேசும் போதோ, இல்லை கேக்கும் போதோ நம்மையும் அறியாம ஒரு எனர்ஜி வரும் பாருங்க அது தாங்க இது... என்ன டா
 இவ அது இது எதுன்னு ஏதோ சிவா கார்த்திகேயன் மாதிரி ஷோ போடா போரளானு பாக்குறேங்களா? அட போங்க பாஸ் நமக்கு ஷோ காட்டவும் தெரியாது, ஜு காட்டவும் தெரியாது  மீ சின்ன புள்ள... 

ஒவ்வொரு மனுசனுக்கும் அவன் வளர்ந்த காலங்கள்ல சில காலம்
மறக்க முடியா காலமா இருக்கும், மழலை காலத்துல இருந்து, இளமை காலத்து வரை , நிறைய விஷயங்களை  கடந்து வந்தாலும், சில விஷயங்கள் மட்டும் நமக்கு எப்போவும் இதயத்துக்கு பக்கமாவே இருக்கும், அப்படிஎன்னை கவர்ந்த என் சென்னை காலத்தை பத்தி தான் இந்த பதிவு முழுதும்..

எங்கேயும் எப்போதும் படம் பக்கும் போதே, இப்படி ஒரு பதிவு எழுதனும்னு நினச்சேன், ஆனாலும் சுய சுரண்டல்கள் எதுக்குன்னு நினைச்சு எழுதாம
விட்டுட்டேன், அப்பறம் இப்போ ஏன் எழுதுனங்கிற உங்க மைன்ட் வாய்ஸ் எனக்கு கேட்டுடுச்சு, இனி எனக்கு தோணுற விஷயங்களை எந்த தயக்கமும் இல்லாம செய்யபோறேன்னு நான் முடிவு எடுத்துருக்கேனுங்க.. ஹி ஹி..
சரி விஷயத்துக்கு வாறேன். இந்த இருபத்தியாறு வருட வரலாற்றுல இந்திய தொலைகாட்சிகளில் முதல் முறையா? கொஞ்சம் ஓவர் அஹ இருக்கோ சரி நொவ் டியூன் சேஞ்சு மாமு..

எங்கேயும் எப்போதும் படம் என்ன மனதளவுல ஈர்த்த படம்னு சொல்லலாம், ஆரம்ப கால என் சென்னை வாழ்க்கைய எனக்கு என் கண்முன்னாடி நிறுத்துன மாதிரி தான் இருந்தது. என் சென்னை பயணம் ரொம்ப வித்தியாசமானது..
நான் வளர்ந்த விதத்துல இருந்து அப்டியே மாறுபட்ட ஒரு சுழலுக்கு என்ன கொண்டு போனது இந்த காலம் தான்.. கல்லூரி படிப்ப முடிச்சு, சுயமா வேலை செய்யணும்ன்னு நினைச்சு, நானே சொந்த செலவுல சூனியம் வச்சு கிட்டது தனி கதை.. அப்பறம் குடும்ப வண்டி அப்படி இப்படி ன்னு தடம்புரள, குடும்ப சூழலுக்காக சென்னை நோக்கி என் பயணம் ஆரம்பம்...

நான் வளர்ந்த உலகம் ஆண்கள் இல்லாத உலகம்.. உங்க அப்பா ஒரு ஆண் தானேன்னு கேக்கலாம்..அதுக்கும் நாங்க பதில் வச்சு இருக்கோம்ப்பா, என் குடும்பத்து உறுபினர்களை தவிர வேறு ஒரு ஆணிடம் நட்பு கூட வச்சுகிட்டது கிடையாது... ஏன்னா ஏன்னா எங்க அப்பா ஒரு ஸ்ட்ரிக்ட் ஆபிசர், ஆபிசர் னதும் உணவு உலகத்துக்கு போய்டாதீங்க, என் குடும்பம் ரொம்ப கட்டுக் கோப்பான குடும்பம், சொந்தம் ன்னு சொல்லி யாரும் வந்தாலும், வாங்கனு சொல்லிட்டு வீட்டுக்கு உள்ள போய்டனும், அப்படி தான் நானும் என் தங்கையும் வளர்க்கப் பட்டோம். 


பள்ளிப் படிப்பும் சரி, கல்லூரிப் படிப்பும் சரி பெண்கள் கல்லூரியில தான், கல்லூரி போட்டிகள்ள கூட பெண்கள் கல்லூரி போட்டியா பாத்து தான் விண்ணப்பிபேன். அதற்க்கான காரணம் எனக்கு என்னனு புரியல, என்னப்
பொறுத்தவரை, உறவல்லாத எல்லா ஆண்களும் அப்போ ஏதோ எனக்கு ரொம்ப பயத்த தான் கொடுத்தாங்க, கொடுத்தாங்கன்னு சொல்ல முடியாது, எல்லாம் என் பாட்டி பண்ணுன வேலை... சின்ன வயசுல இருந்தே பசங்க கிட்ட சேரக்கூடாதுன்னு சொல்லி வளத்துட்டாங்க..


பலபேரு அறிவுரைக்கு அப்பறம், சென்னைக்கு என் உறவினர் வீட்டுல தங்க அனுமதி வாங்கி பொறப்பட்டேன்.
ஒரு வழிய சென்னை எக்மோர் அஹ அடஞ்சாச்சு. ஜனம் பெருத்த ஊருன்னு
சரியத் தான் சொன்னங்க.. சென்னைய பாத்ததும் பயம் தொத்திக்கிச்சு, எங்க மதுரை தூங்கா நகரம் தான், அங்கேயே எவ்ளோ நேரம்னாலும் நாங்களெல்லாம் அசால்ட்டா சுத்துவோம், இது என்ன பெரிய சென்னைன்னு பீத்திக்கிட்டு வந்தேன், எக்மோர் அஹ பாத்ததுமே நான் சொன்னது தப்புன்னு ஒத்துக்கிட்டேன்...


ஒரு வழியா சொந்தக்காரங்க வீட்டுல தங்கியாச்சு, முதல் தடவை அம்மாவின் அருகாமையை, தம்பி தங்கச்சியோட சண்டைய, அப்பாவோட ஆறுதல் பேச்ச ரொம்ப மிஸ் பண்ணுன நேரம் அது. முதல் முதல் அஹ ஒரு interviewku போறேன்...இன்டெர்வியூல செலக்ட் ஆனேனா இல்லையா? அத அடுத்த பதிவில சொல்றேன், கண்டிப்பா இந்த பதிவு மெகா செரியல் தான் பாஸ். பின்ன மூணு வருஷம்ல ஒரே போஸ்ட் அஹ போட்டுட முடியுமா? அடுத்த பதிவில பாக்கலாம்...ஹி ஹி....

திங்கள், 9 ஜனவரி, 2012

கடந்த காலம் ஒரு பார்வை...


வணக்கம் என் வலையுலக உறவுகளே நலமா? வருடம் ஆரம்பித்து இப்பொழுதுதான் உங்களை சந்திக்க முடிந்தது. மகிழ்ச்சியா 2011 வழியனுப்பி வச்சாச்சா? பிறந்திருக்கும் வருடம் கண்ணிடிப்பா நல்ல விசயங்களை எல்லார் வாழ்க்கையிலும் தரும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை...(மாயன் காலண்டர் ஒரு பக்கம் பயமுறுத்தும்... இருந்தாலும் டோன்ட் வொர்ரி பி ஹாப்பி  )  இந்த வருடத்தில  இருந்து  ஒவ்வொரு  விசயத்தையும்  மன நிறைவோட பண்ணனும்னு நினைச்சிருக்கேன்,  அதான் என் மனசுக்கு பிடிச்ச விசயங்களையும், பாதிச்ச விசயங்களையும் அசைபோடும் ஒரு நிகழ்வா இந்த பதிவ வடிச்சிருக்கேன்... 2011 நான் அதிகம் எதிர்பார்த்த வருடம்னு தான் சொல்லணும்....எனக்கான பல மாற்றங்களை கடந்த காலம் தரும்னு காத்திருந்தேன், உதாரணாம வேலையில இருந்து இன்னும் பல விஷயங்களை சொல்லலாம்...

வாழ்க்கையில நம்மளையும் மீறி சில விஷயங்கள் நடக்கும் தானே, அது மாதிரி தான் என் பதிவுலக பயணமும்...ஆனாலும் இங்க  எல்லாருக்கும் இருக்கிற இந்த காதல் (பதிவுலகம் மேல ) எனக்கு அப்போ பதிவுலகம் மேல இல்லை..எனக்கு தெரிஞ்சு என்னோட ரேவா கவிதைகள் என் பர்சனல் டைரி அஹ தான் எனக்கு இருந்தது, இதுக்குப் பின்னாடி இப்படி ஒரு மாய உலகம் இருக்கும்னு நான் நினைச்சதே இல்லை. இரண்டாயிரத்து பத்திலேயே பதிவுகள் போட ஆரம்பிச்சாலும், பதிவுலகத்துக்கே இருக்கிற சில சம்பிரதாய சடங்குகள் நான் அறிய காரணமா இருந்தது சகோதரன் கார்த்திக், அவர் இல்லாட்டி இன்னைக்கு எனக்கு நல்ல உறவும் நட்பும் கிடைச்சிருக்காது,,அதற்க்கு நன்றி.

என்னப் பொறுத்தவரை பதிவுலகம் எனக்கு ஒரு தவச்சாலைன்னு தான் சொல்லணும்...என்னோட வாழ்வியல் வலிகளுக்கு மருந்தா இருந்ததால, இருக்கிறதால அப்படி சொல்றேன்..ஏதோ விளையாட்டா  எழுத ஆரம்பிச்சேன், நல்லா எழுதுறேனோ இல்லையோ தெரியாது, ஆனா போலியாய் இல்லாமல் எனக்கு ஒன்னுனா உயிர் துடிக்கும் நல்ல மனிதர்களை நட்பாவும், உறவாவும் சம்பாதிச்சிருக்கேன்னு நினைக்கும் போது, என்னையும் அறியாம ஒரு கர்வம் காதலா என்ன தொற்றிக் கொள்ளுது...

பதிவுலகம் வந்தப்போ  இருக்கிற என் எழுத்திற்கும், இப்போ இருக்கிற என் எழுத்துக்கும் மாறுதல் இருக்கு, சோ மாறுதல் தந்த இந்த உலகிற்கு நன்றிகள். என்னோட சின்ன சின்ன கவிதைகளையும் பாராட்டி, தப்புனா திருத்தச் சொல்லி, நல்ல இருந்தா வாழ்த்தி வருற அத்துணை மறுமொழிகளுக்கும், மறுமொழி இடும் நண்பர்களுக்கும் நன்றி...
கடந்த வருடத்தின் சந்தோஷ நிகழ்வுனா பதிவுலகத்துல இருந்து நல்ல நட்புகள் கிடைச்சது தான். வேதனையான விஷயம்னாலும் இதே பதிவுலகத்தில் நடந்த கசப்பான விஷயங்கள் தான்..
மிகப் பெரிய சந்தோஷம் னு சொல்லனும்னா என் தம்பி கல்லூரி படிப்பில இருந்து அடுத்தக் கட்ட வாழ்க்கைக்கு அதாவது வேலைக்கு அடியெடுத்து வச்சது தான்...இப்போதைக்கு எல்லா வலிகளையும் சுகங்களா எடுத்து வாழப் பழகிகிட்டேன்..இனிவரும் என் காலமும் அப்படியே தான் தொடரும்...
இதுவரை என்னைத் தொடரும் அனைத்து சகோதர நட்புக்கும் நன்றிகள் பல... தவிர்க்க முடிய சில காரணங்களால் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் போட வேண்டிய பதிவு இப்போ தான் போட முடிஞ்சது...மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம் என் உறவுகளே....

சனி, 21 மே, 2011

என்னது எனக்கு வர்றவரு புண்ணியம் செஞ்சவரா?.....



ஹாய் நண்பர்ஸ்..... வழக்கம் போல காதல் கவிதையையே கிறுக்காமா, கொஞ்சம் வித்தியாசமா ஏதாவது கிறுக்கலாம்னு நினச்சுதான் இந்த பதிவு...நேத்து முகூர்த்த நாள்கிறதால ஏகப்பட்ட கல்யாணங்கள்..எங்க அம்மாவும், அப்பாவும் மாறி மாறி ஒவ்வொரு சொந்தக்காரங்க கல்யாணத்துக்கா கிளம்பிட்டு இருந்தாங்க...இதுல என்ன கண்டுக்கவே இல்லை....

பிள்ள கொழந்தயாச்சே, சாப்பாடுக்கு என்ன பண்ணும்னு நினைப்பே இல்லாமல் கிளம்பிட்டாங்க....சரி நானும் அம்மாவந்து ஏதாவது சமையல் செஞ்சு தருவாங்கன்னு சாப்பிடாம  இருந்தேன்..மதியம் ஒரு 12 மணி இருக்கும், எங்க வீட்டு காலிங் பெல் அடிக்கிற சவுண்ட் கேட்டது, என்னடா வழக்கமா நம்ம வீட்டுல இந்த பழக்கத்த எல்லாம் பாலோவ் பண்ணுறது இல்லையே,பின்ன யாருன்னு பாத்தா கொழந்தைங்க...அவங்கள சத்தம் போட்டுட்டு வந்துட்டேன்...மறுபடியும் காலிங் பெல் அடிக்கிற சத்தம், அப்போ கண்டிப்பா எங்க வீட்டு பக்கத்துல இருக்கிற குட்டிப் பிசாசுங்க தான் இந்த வேலையப் பண்ணுங்கனு, கண்டுக்காம இருந்துட்டேன், மறுபடியும் காலிங் பெல் அடிக்கிற சவுண்ட், சரி இதுங்கள இப்படியே விட்டா சரிப்படாதுன்னு திட்டிகிட்டே போக, கடைசில பாத்தா எங்க அத்தை மாமா வந்துருக்காங்க... 

நான் அப்படியே சாக் ஆயிட்டேன்.. வழக்கம் போல அவங்க கிட்ட குசலம் விசாரிச்சுக்கிட்டு கிளம்பிடுவாங்கனு இருந்தப்போ தான் என் தலைல அந்த பெரிய இடி விழுந்தது...ரேவதி உன் மாமா க்கு கல்யாண சாப்பாடு ஒத்துக்காது, அவருக்கு சுகர் இருக்கு, இங்க நீ சமைச்சுத் தறியா ?.....நீ நல்லா சமைப்பேன்னு அப்பா சொல்லிருக்கான்னு என் தலைல இடிய ஏறக்க, நானா நான் நான் நான்தானே நல்லாவே சமைப்பேன் அத்தை னு சொல்லி கிச்சன் போனவ தான்....(.அதோட அந்த அத்தைக்கு அழகான பையன் இருக்கான்...இப்போ நீங்களே சொல்லுங்க, சமைக்க தெரியாட்டியும், தெரியும்னு தானே சொல்லுவேங்க, நானும் அப்டித் தான் சொன்னேன்...)

சரி சமைக்கிறது என்ன பெரிய ஆரிய வித்தையானு களத்துல குதிச்சுட்டேன்...இந்நேரம் பாத்து வீட்டுல ஒண்ணுமே இல்ல, சரி ஒரு வெஜிடபிள் .பிரியாணி செய்யலாம்னு மேக்கிங் பவுடர் எடுத்து, அப்படி, இப்படின்னு கைக்கு கிடைச்சது, எனக்கு பிடிச்சதுன்னு எல்லாத்தையும் குக்கர்ல போட்டு, அரிசியையும் அதோடு போட்டு, கைடைசில ஒருவழியா குக்கர ஆன் பண்ணி, ஒரு டைம் பிக்ஸ் பண்ணிட்டேன்.....நேரம் ஆக ஆக மாமா டென்ஷன்ல,அத்தைய கத்துறது, எனக்கு இங்க கிச்சன்ல கேட்டது....ஆனாலும் நாமலாம் யாரு...இந்த சல சலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டோம்ல(அவ்வ்வ்வவ்வ்வ்வ்)..பின்ன அத்தை வந்து என்னமா ரெடி ஆகிடுச்சா, உன் மாமா கத்துறாரு, பரவா இல்லையே நல்ல வாசனை வருதேன்னு சொல்ல, இதுவேறயான்னு மனசுக்குல நினச்சுக்கிட்டு, அத்தை நீங்க போன இதோ ஒரு பத்து நிமிஷத்துல எல்லாத்தையும் ரெடி பண்ணிடுறேன்,  நீங்க போய் ரெஸ்ட் எடுங்கத்தனு, அவங்ககிட்ட  சொன்னேனே தவிர எனக்கு ஒன்னும் தெரியாதே...அவ்வ்வ்வவ்வ்வ்வ் மீ பாவம்ல,

சரி எல்லாம் பண்ணிட லாம்னு பாத்தா, கடைசி நேரத்துல குக்கர்ல இருந்து அலாவுதீன் படத்துல பூதம் கிளம்புற மாதிரி ஒரே பொகையா கிளம்புச்சு...என்னடா இந்த ரேவதிக்கு வந்த சோதனைன்னு, வேண்டாத தெய்வத்தை எல்லாம் வேண்டிட்டேன்...இத சரியா பண்ணாட்டி இவங்க போய், அவங்க பையன்ட என் அருமை, பெருமைய எல்லாத்தையும் சொல்லிடுவாங்களே, நமக்கு இருக்கிற ஒரு அத்தை பையனும் இல்லாம போயிடுவாநேனு மனசு கெடந்து தவிக்க, இந்த பாழாப்போன குக்கரு பிசாசு வேற விசில் அடிக்கவே இல்ல, கடைசில குக்கர தொறந்து பாத்தா பாத்தா பாத்தா, அட இருங்க பாஸ், கொஞ்சம் பில்ட் அப் கொடுத்துக்கிறேன்...தொறந்து பாத்தா ஒரே தண்ணியா இருக்கு,  கிட்டத்தட்ட ரெண்டு மணிநேரம் கழிச்சு, மாமாவே கிச்சன் வந்து ரேவா சாப்பாடு கிடைக்குமா, இல்லா கிடைக்காதானு கேக்க, அந்த நேரத்துல நான் காமிடி பன்னுரேணாம், அவர்ட்ட கிடைக்கும் ஆனா கிடைக்காதுன்னு அள்ளிவிட மனுஷன் டென்ஷன் ஆகிட்டார்...பின்ன எபப்டியோ சமாளிச்சு,
வேர்க்க, விறுவிறுக்க, கிட்ட தட்ட திர்ல்லர் படம் பாக்குற எபெக்ட் ல அந்த சமையல் அஹ செஞ்சு முடிச்சுட்டேன்..ஸ்ஸப்பா...முடியல...

என்ன மெனுன்னு கேக்குறேங்களா?(இம்க்கும் இதுவேறயான்னு நீங்க நினைக்கிறது எனக்கு தெரியுது...ஆனாலும் விடமாட்டோம்...ஏன்னா நாங்கலாம் மதுரை காரங்க ஹி ஹி ) 

பிரின்ஞ் ரைஸ், ஆனியன், அப்பறம் தயிர், அப்பறம் ஒயிட் ரைஸ், கொஞ்சம் உருளைக்கிழங்கு வறுவல் இவ்வளவும்  கஷ்டப் பட்டு செஞ்சாச்சு..மாமாவுக்கு சாப்பாடு அத்தை போட, மாமா சாப்ட்டு டெரர் லுக் கொடுக்க, நான் மாமா சாப்பாடு எப்படி  இருக்குனு தான் கேட்டேன்....மனுஷன் தார தாரையா  கண்ணீர் அஹ கொட்ட ஆரம்பிச்சுட்டாரு...இத்தன வருசத்துல என் பொண்டாட்டி கூட இப்படி ஒரு சமையல் பண்ணது இல்ல ரேவதினு சொல்ல, எனக்கோ ஆகாயத்துல பறக்குற ஒரு பீலிங், என்ன பீலிங்க்னு நீங்க கேக்கலாம்...ஆனா நான் சொல்ல மாட்டேனே...

கடைசியா அவரும் சாப்டாச்சு, காபி போடவான்னு கேக்க  வேணாமா கடைல வாங்கிடு வர சொல்லுனு சொல்லிடாரு(அவ்வ்வ்வவ்வ்வ்)
அப்பறம் காபி குடிச்சுட்டு கிளம்பும்போது, கிளம்பும் போது, அவ்வ அத எப்படி என் வாயல சொல்லுவேன்...எங்க மாமா பையன் சொல்லிருந்தேன்ல  அவனுக்கு என்ன கட்டிகொடுக்கனும்னு நினச்சாங்களாம்,ஆனா உன்ன மாதிரி திறமையான பொண்ணுக்கு, அவன் சரி பட மாட்டான் ரேவதி...ஆனா ஒன்னு சொல்லுறேன், உனக்கு வரவன் ரொம்ப கொடுத்து வச்சவன்னு சொல்லிட்டு போயிட்டாங்க....அடப் பாவிங்களா?...இதுக்கா இந்த போராட்டாம்...நீங்களே சொல்லுங்க மீ பாவம்ல...


(ஒரு மாறுதலுக்காய் கற்பனைகலந்த நிஜத்தை நகைச்சுவையாய் பதிவு செய்துள்ளேன்...பிடித்திருந்தால் கருத்திடவும்...வரட்டா...ஹி ஹி...)