*
காதலாய் முதல் முதல்
என் இதயம் தொட்ட
என் கள்வனே!!!
* என் இதயம் உன்னிடம் மாறிய
காலம் முதலே உன்னோடான
என் காதல் எதிர்ப்பார்புகள்
நீளத்துடங்கின..
* அழுகையில் ஆரம்பித்து
புரிதலில் தொடங்கி,
அரவணைப்பில் முடியும்
என் வாழ்வின் பக்கங்கள்
உன் வரவையே
எதிர்பார்த்து காத்திருக்கின்றன....
* செல்ல சினேகிதா!!!
உன் காதல் சொல்லி நீ
எனக்காய் காத்திருந்த காலம்
எல்லாம் கர்ஜனையோடு
உன்னை வெறுப்பதாய்
என் அழகோடு நான் கர்வம் கொண்டேன்...
* உன் காத்திருத்தலின் வேகம்,
உன் அன்பின் ஆழமும்
என்னையும் காதல் கொல்லச்செய்தது ...
* உன் வழிவரும்வரை
என் விழிப்பார்வைக்கு
காத்திருந்த நீ.,
இன்று விழிமேல் வழிவைத்து
காத்திருந்தும் வேலையின் பெயர் சொல்லி
என்னை காக்கவைப்பதேன்
காதலா?
என் எதிர்பார்ப்பெல்லாம்
* தலை சாய்ந்து படுக்கும்
போது... அரவணைக்கும் தோளாய்
கோதுகின்ற விரலாய்,
உன் நேசம் எனக்காய் இருக்க வேண்டும்...
* சண்டையின் போது சமாதான
தூதுவனாய் உன் முத்தம்
எனக்காய் இருக்க வேண்டும்...
* அலுவலக நேரத்தில்
அலுக்காமல் உன் அலைபேசியில்
எனை அழைத்து அன்புகதை
நீ பேசிடவேண்டும் ...
* விரும்பிய நேரத்தில்
என் விழிகள் தேடும் தூரத்தில்
உன் பிம்பம்.நான் காண வேண்டும்.
* சோதனைகள் வந்தாலும்..
சாதனைகள் புரிந்தாலும்
உன் தோள்சாய்ந்து
நான் வெற்றி கூச்சலிட
நட்பாய் நீ எனக்கு வேண்டும்...
* தோல்வியின் வேதனையிலும்...
வெற்றியின் பாதியிலும்
பலம் தரும் பாதுகாவலாய்
நீ எனக்கு வேண்டும்..
* உறவாய் வந்து என் உணர்வில்
கலக்கும் என் உயிராய் நீ எனக்கு வேண்டும்..
* நான் வாழ்கின்ற வரைக்கும்
என் காதல் மரணம் தொட்டு முடியும்
வரைக்கும் உன் காதல் எனக்காய் வேண்டும்...
* என் இதயம் கவர்ந்த கள்வனே !!!!
உன்னோடான என் எதிர்பார்ப்புகள்
ஏமாற்றத்தை தந்தாலும்..
எதிர்பார்க்காமல் என்
எதிர்கால வாழ்வை
வாழ கற்றுத்தந்தது உன்னோடான
என் எதிர்பார்ப்பு...
ஆம்!!!!
* அன்பு கொண்ட நெஞ்சில் எல்லாம்
ஆயிரம் அசைகள் இருக்கும்
என்றால்...
ஆன்பால் எனைவென்ற என்
ஆடவனே!!!
நீயின்றி நீளும் என் நாட்களின்
எதிர்பார்ப்பெல்லாம்....
உன் குரல் கேட்டு
என் பொழுது விடியவேண்டும்...
உன் மடியில்
என் இரவு முடியவேண்டும்...
அன்புடன்
ரேவா