உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 19 ஜனவரி, 2017

மெளனம் சரணம் கச்சாமீ



*
குறியீடுகளால் நிரம்பியிருக்கும் நீர்த்தேக்கத்தில்  
நீயாகவே பிரதிபலிக்கிறாய்

இம்மை  
ஒரு கரை  
பிரமை  
மறுகரை  
கடலெனும் மாயை  
மழையாய் பொழிகிறது நிலத்தில்


காதைப் பிளக்கும் இடிச்சத்தம்
கண்கூசச் செய்கிற மின்னலொளி
அலைக்கற்றை வழியாய்த் துண்டிக்கச் செய்கிற
அறிவு
தொடர்பற்றதின் மோனநிலை

சூரியன் பார்க்க நிற்கிற நிமிடம்
இருட்டுகிற அறை
வெளிச்சமேற்றுகிறது படிமத்தின் மாடத்தில்


புரிவதில்லை
சொல்லின் முதல் தோள்  
ஊடுருவுகிற மடிப்புகள்
விளங்காத கிரணக் குறைபாடு

வளர்கிறாய்
இருள் குடித்து
ஆடுகிறாய்
காற்றை இசைத்து


அனைத்தையும் துறந்து ஆட்கொள்கிறாய்
விழி மூடிய புத்தனின் புன்னகை கொண்டு
விளங்காதிருக்கிறாய்

ஆசை துறக்கும் ஒப்பீடு
உவமைக்குப் பொருந்துவதில்லை
உவமேயப் பார்வையில் பிரதிபலிக்கிற நீர்த்தேக்கம்
மடை திறக்கிற சொல்
இக்குறியீடு



1 கருத்துகள்:

Unknown சொன்னது…

மிர்தாத் படித்த பின்
அது ஒன்றே நம் அலமாரியில் நிலைக்கும்

அறிவேன்