வணக்கம் மக்கா( சும்மா நம்ம பலமொழி பகலவன் கிட்ட இருந்து சுட்டது ஹி ஹி )...எல்லாரும் எப்படி இருக்கீங்க.. என்னடா இவ திடிருன்னு நலம் விசாரிக்கிரானு பாத்திங்களா... அட ஆமாங்க கொஞ்ச நாளா நாமா யாரும் நலமா இல்லையோனு எனக்கு ஒரு டவுட்.... நாமா நல்லாத் தானே இருக்கோம் இவ என்ன பதிவு போடணுமுன்னு நம்மள எல்லாம் சீக்காளியா ஆக்குரானு நினைக்காதிங்க... உடல் ஆரோக்கியம் மட்டும் ஆரோக்கியம் இல்ல நம்ம சமூக ஆரோக்கியமும் நமக்கு அவசியம் தானே.... அதன் படி பாத்தா நம்ம சமூகம் ஆரோக்கியமா இல்ல.... அரசியல் தொடங்கி அன்றாட அரிசியியல் வரைக்கும் நம் ஆரோக்கியம் யாரோ ஒருத்தரால சுரண்ட படுறது உண்மை தானே....
சரி விசயத்துக்கு வரேன்... இன்னைக்கு உலகம் ரொம்ப அவசர உலகமா போயிகிட்டு இருக்கு.... யாருக்கும் எதப் பத்தியும் சிந்திக்க நேரம் இல்ல... எது சரி எது தப்புன்னு தீர்மானிக்க தெரியல... (ஹலோ இது டூ மச் அஹ இல்ல னு நீங்க சொல்லுறது எங்களுக்கும் கேக்குது)....
நம்ம உலகம் விளம்பர உலகமா போயிடுச்சு.... கொழந்த பொறப்புல இருந்து காதல், கல்யாணம், கல்யாணத்துக்கு தேவையான ஆடை அணிகலன் முகப் பூச்சு..என .நமா அன்றாடம் உபயோக்கிகிற அத்யாவிசயப் பொருள் எல்லாத்துக்கும் விளம்பரம்....இதுல அணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனியான விளம்பரங்கள் நெறைய , இப்படி A TO Z எல்லாத்துக்கும் நமக்கு விளம்பரத்தோட துணை தேவையா இருக்கு....
டிரஸ் வாங்கனுமா அதுக்கு ஒரு விளம்பரம்...வீடுகட்ட தரமான சிமெண்ட் வேணுமா அதுக்கு ஒரு விளம்பரம்...விளம்பரம் விளம்பரம் விளம்பரம்..இந்த கொடுமை எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு இருந்தாலும் இப்போ வருற விளம்பரம் இருக்கே ஐயோ..முடியல சாமி...
அது எப்டிங்க ஒரு பையன் சென்ட் அஹ ஸ்ப்ரே பண்ணதும் பொண்ணுங்கலாம் டபுக்கு டபுக்குனு வந்து அவன் மேல ஒட்டிக்கிராங்களாம்...கேட்டா பொண்ணுங்கள கவருற சக்தி அந்த வாசனைக்கு இருக்காம்... அதுக்காக இப்படியா, இதுக்கு எந்த கண்டனமும் இதுவரைக்கும் எழுந்த மாதிரி தெரியல... இதுல புதுசு கண்ணா புதுசுனு பிளேவர் வந்துகிட்டே இருக்கு...சரி இன்னொரு கொடுமை என்னன்னா நேத்து பொழுது போகலன்னு டிவி அஹ ஆன் பண்ணேன் மக்கா... ஒரு பொண்ணு ஆண்கள் உபயோகிக்கும் பைக் அஹ ஓட்டிக்கிட்டு வந்துச்சு.. ஒரு பையன் அவளுக்காக வெயிட் பண்றான்,, இவ போலாமான்னு கேட்க அவன் சோகமான முகத்தோட அவன் வீட்ட பாக்குறான்...
இந்த அம்மணி ஏன் கவலைப்படுற நாம ஓடிப் போயி கல்யாணம் பண்ணிக்கிட்டு, வரவேற்ப்புக்கு உங்க அம்மா அப்பாவா கூப்பிடலாம்னு சொல்லுது, பையன் அப்படியும் டவுட் அஹ இருக்க, இந்த அம்மணி அவர் கைமேல் இவங்க கை வச்ச உடனே இந்த அம்மிணி போட்டிருக்கிற பவுடர் வாசனைல மயங்கி பையன் பொண்ணு பின்னாடி வண்டில ஒக்காந்து போயிட்டான்....கேட்டா வாழ்க்கைக்கு நல்ல துவக்கம் வேணும்னா நறுமணம் கவழும் இந்த பவுடர் யூஸ் பண்ணுங்கனு.முடிச்சிட்டாங்க.. என்ன ஒரு தீம்ல... ச்ச யோசிச்சவனுக்கு விருது கொடுக்கனும்யா... கொடுமை கொடுமைன்னு தலைல தான் அடிச்சுக்கணும்... கேக்குறவன் கேணைனா கேப்பைல ஏதோ வடியுமா?....
இதுவா விளம்பரம்... ஒரு பொருளோட தரம் நல்லா இருந்தா, விளம்பரம்கூட தேவை இல்ல... அப்படியே விளம்பரம் தேவையானதா இருந்தா பொருளைப் பத்தி சொன்னாவே போதுமே...நிக்க கூட நேரம் இல்லாத இந்த நேரத்துல ஒரு புதிய பொருள் பத்தி நமக்கு தெளிவான எண்ணம் தேவை தான், அதுக்கு விளம்பரங்கள் அவசியம் தான்... அதுக்காக நானே ராஜா நானே மந்திரி மாதிரி எதையும் விளம்பர தயாரிப்பு நிறுவங்கள் செய்யக் கூடாதே..
ஒரு குழந்தை ஆரோக்கியமா இந்த உலகத்தில வாழனும்னா முதல்ல தாயோட அரவணைப்பு அவசியம் அப்போதான் அந்த குழந்த நல்ல படியா வளர முடியும்...சோ நம்ம வாழ்க்கைக்கே அன்புங்கிற கரு தேவைப்படுது...நம்மள நம்ம தாய் நம்ம வளர்த்தது போக சமுதாயம் தான் நம்மள வளர்கிறது..அப்படிப்பட்ட . நம்ம சமுதாயத்தின் நிலைகளை இன்னொரு நிழலாய் தொடரும் மீடியா கொஞ்சம் யோசிச்சு எல்லாத்தையும் செஞ்சா நல்லா இருக்கும்....மீடியாக்களும், மீடியா வழியா ஒய்யார பவனி வரும் விளம்பர நிகழ்சிகளும் நல்ல கருவை தரமான முறைல சொன்னா எல்லாருக்கும் நல்லா இருக்கும்... வளர தலைமுறைய நம்ம பாதை மாறமா கொண்டு போகமுடியும்...நீங்க என்ன சொல்லறேங்க நண்பர்களே....
கடைசில நம்ம கமல் சார் ஸ்டைல்ல மீடியாக்களும், மீடியாக்கள் கொடுக்கிற விளம்பரங்களும் நமக்கு நல்லது செய்யலன்னு சொல்லல.... செஞ்சா நல்லா இருக்கும்னு சொல்லுறேன்....
முந்தய பதிவு: உன்னால் உடைந்து போனேன்
உங்கள் கருத்துக்களை மறக்காமல் இன்ட்லி, உலவு, தமிழ் மணத்தில் இட்டுச் செல்லவும்.... வாழ்த்துங்கள் வளர்கின்றோம்...