உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 29 டிசம்பர், 2015

மனம் அரிக்கும் பதிலொன்றின் பவளப் பாறை



எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதிலாய் இருக்கிறது இந்த மெளனம்
 


கோபம் கொட்டித் தீர்த்த சொல்லில் கிளிஞ்சல் பொறுக்குகிற மனம் கடல் ஆழம்

அலை திருப்பிவிடுகிறது அதன் முகமற்றதை

அனுமதிக்கிற கரை கை அழைத்துப் போகும் தூரம் நங்கூரம்

கிளம்புதல் குறித்த பாதையறியா பதிலொன்றில் முளைக்கிற கேள்விக்குள் பவளப் பாறை
 

0 கருத்துகள்: