பனி கொட்டும் மார்கழியில்
தூரத்தில் ஒலிக்கும் பக்திப் பாடலோடு
கலந்து கொடுக்கும் தேனீரைப் போலிருக்கிறது
மனச்சூட்டின் இளங்காலை
கசங்கிக் கிடக்கும் மெத்தை விரிப்பில்
கலைந்திருக்கும் நேற்றைய ரங்கோலிச் சிதறல்களை
விரல்களால் சரிசெய்து
அதன் அதன் இடத்தில் இட்டுவிட
மொத்த வண்ணமும் ஒன்றாய் சேர்ந்து
கருப்பு முகம் வரைய
விரலிடுக்கின் வழி இறங்கிய ஈரம்
உண்மையின் நிறத்திற்கு ஏங்கி
அடுக்கப்பட்ட வரிசையில்
சலனமின்றி கிடக்கின்ற மெத்தை விரிப்பை
கலைத்துப் போட
அமைதி உடைக்கும் மின்விசிறியோ
சிரிக்கும் புத்தனோ
அண்ணன் மகளின் விளையாட்டு பிரவேசமுமின்றி
நீர்த்துக் கிடக்கும் எனதறையில்
மாரி வந்து ஆடிப் பார்க்கிறாள்
எல் ஆர் ஈஸ்வரியாகி
-ரேவா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக