உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 11 மே, 2015

கடவுளாதல்






கோயில் மணிச் சப்தத்திலிருந்து
கதறிக் கொண்டிருக்கின்றன
காதுகேளா பிராத்தனைகள்

படியிறங்கி வரும் மனங்களின்
காணிக்கைக்காய் வேண்டிக்கொண்டிருக்கிற
கிழிந்த ஆடைச் சிறுமியின்
சில்லறைத் தட்டும் கோயில் மணியும்
சேர்ந்து ஒலிக்கும் நேரத்தில்

திசைக்கொன்றாய் பறந்த சப்தங்களுடன்
செவியடைத்த தெய்வங்களுக்கு
மெளனத்தை தட்டிலிட்டு

நான் கடவுள் ஆனேன்

-ரேவா

0 கருத்துகள்: