உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 11 மே, 2015

பிரியத்தின் ஊதாச் செடி



விதை பிடித்த நாளொன்றிலிருந்து
கொஞ்சம் கொஞ்சமாய் வேர் விட்டெழுகிறது
பிரியத்தின் ஊதாச் செடி

விழிக்கும் பொழுதில்
தெளிக்கும் நீர்
உயிர் வளர்த்துச் செடியினை எழுப்ப

உச்சிப் பொழுதில்
உறிஞ்சும் மட்டும் ஈரம் சேமிக்கும்
தண்டினை மீறி
உதிரும் ஒன்றிரண்டு இலைகளின் வீழ்தலில்
நுழைந்து வழிகிற காலத்தினுள்

மொட்டவிழ வெடிக்கும் சத்தம்
மலர்தலுக்குத் தான்

-ரேவா

0 கருத்துகள்: