உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 11 மே, 2015

மரணத்தை விழிக்கும் சுடலை



தள்ளிப்போன பின் நெருங்கி வரும் 
பார்வைக்கு பயந்தே இழுத்து மூடுகிறேன்
மனச்சாளரத்தின் திரைச்சீலையை

நினைவுக் காற்று அசைத்துப்பார்த்த உள் அறையில்
ஒத்திகை சொற்களின் வெளிச்சம்
பயனற்று கிடக்கையில்

இருள் எழுந்தாடும் பழையதன் தடத்தில்
பற்றி எரிகின்ற காட்டின்
மொத்தமும் கருகி

சாம்பலாய் கிடக்கும்  மெத்தையில்
சுருண்டு படுக்கும் எனக்குள் விழிக்கத் தொடங்கிய 

சுடலையை கட்டிப் போடுகிறவன் 
மீண்டும் என்னை மாற்றிப் போடலாம்

ஒரு விலங்காகவே


-ரேவா

0 கருத்துகள்: