உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

சனி, 16 மே, 2015

பாலையில் பெய்யும் மழை




துளி ஈரம் மிச்சமிருக்கையிலே
அதை விட்டிருக்கலாம்

முடியும் வரை உறிஞ்சியெடுத்துவிட்ட பின்
உலர்வுகள்
பிளந்த உதடுகளை
வெடிப்புகளாய் விரித்துக்காட்டியும்
பருகுதல்
கானல்


இருந்தும் துரத்துகின்றாய்
கைக்கெட்டா தூரத்தில் தெரிந்திடும் வார்த்தைக்காய்
போராடிப் பார்க்கும் நிலம்
மீண்டும்
மழை வேண்டி தவமிருக்கும்

நீ
மட்டும் பொழியாதிரு
உன் மாமழையை


-ரேவா
Painting : Michaela

0 கருத்துகள்: