உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 11 மே, 2015

பிடிதொலைத்த மெளனத்தின் சத்தம்



குழந்தைகள் பூங்காவில் தனித்து விடப்பட்ட
ஊஞ்சலாய்
உனதிந்த மெளனம்

காற்று கலைத்து ஆட்டி விடும் அதனிடம்
கட்டுண்டிருக்கும் சங்கிலியாய்
என்னை இறுக்கிப் பிடிக்கிற அமைதியில்
க்ரீச் சத்தம்

வெறிச்சோடிய வார்த்தையின் வரிசையை
ஊஞ்சலில் ஏற்றி விட
பிடி தொலைத்த பிள்ளையின் அழுகையாய்
உன்னைத் தேடும் சொல்லில்
பயத்தின் பீதி

சமாதான முந்தாணையில் கண்ணீர் துடைத்து
ஆடுவதற்கு வழிசெய்கையில்
இரு கைப் பிடித்து விளையாடிப் பார்க்கிறாய்
மெளனத்தை திசையெங்கும் வீசி

-ரேவா

0 கருத்துகள்: