உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 11 மே, 2015


 எனது வீட்டின் அறைக் கதவை தாழிட்டேன்
அப்படியே ஜன்னலுக்கு திரையிட்டு
வெளிச்சத்தைப் பூட்டினேன்


வெளியேற துடித்த துயரத்தின் காலைக் கட்டி
மேசையில் அமரவைக்க
இரு குவளை தேனீர்
துயரத்திற்கும் எனக்குமாய் வந்து சேர்ந்தது


கொதிக்க கொதிக்க பார்த்த துயரம்
ஊதி ஊதி பெரிதாக்கியது

அறையின் உக்கிரத்தை

பின் 

அதுவும் காளி நடனமாட
கலைக்கூத்தாடி போல் நானும் ஆடினேன்


மெல்லிய இசைகேட்கும் எனதறை
இப்போது பேயிசையில் அதிர்ந்துகொண்டிருக்க
எரியும் நெருப்பொன்று எங்கிருந்தோ வந்து
சாம்பலாக்கியது

ஆக
துயரமும் நானுமாய்
தற்கொலையில் வென்றிருந்தோம்
இனி இது கவிதையில்லையென்று
சொல்பவர்களை பற்றிய கவலை நமக்கெதற்கு...



-ரேவா

0 கருத்துகள்: