உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 18 ஜனவரி, 2016

யாசகம்


*

யாருமற்ற என்ற சொல்லின் குரல்வளை
நெறிக்கிறது
உச்சரிக்க திணறும் தனதென்ற 

இருப்பின் ஒலியை

காற்றுப் பெருகி உடைந்திடும் தருணம்
கண்கள் சிவக்க
இருக்கிறேன் என்பது ஒருவகையான

யாசகம்

பாத்திரம் திருடு போவதில்
ஏனித்தனை படபடப்பு


கொண்டு வாழ்வதைப் போல் இனிப்பதில்லை
உண்டு வாழ்வது



-ரேவா









0 கருத்துகள்: