பிழைத்தலுக்கான கதவு மூடியே இருக்கிறது
தட்டிப்பார்க்கும் தீவிரம்
கொடுக்கும் சத்தத்தில்
நிலம் அதிர
நீர் பூக்கிறது
மனதின் வாசனை அழித்து
படபடக்கும் மூச்சில்
கடந்து வந்த தூரம்
காரணமேவும் வலியில்
சரளைக் கற்கள் பதம் பார்த்த தடம்
உட்கார இடம் தேடும் காயம்
உருண்டோடும் காலத்தைச் சாட்சியப்படுத்தும்
நிராதரவு
அண்டிப் பிழைப்பதாய் நம்பிக்கை
இனி
வழியே இல்லையெனும் முடிவில்
திறந்து கொள்கிறது
கதவு
-ரேவா
கடந்து வந்த தூரம்
காரணமேவும் வலியில்
சரளைக் கற்கள் பதம் பார்த்த தடம்
உட்கார இடம் தேடும் காயம்
உருண்டோடும் காலத்தைச் சாட்சியப்படுத்தும்
நிராதரவு
அண்டிப் பிழைப்பதாய் நம்பிக்கை
இனி
வழியே இல்லையெனும் முடிவில்
திறந்து கொள்கிறது
கதவு
-ரேவா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக